லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரையே பதம் பார்ப்பதா!

லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனரையே பதம் பார்ப்பதா!

ம.பா.கெஜராஜ்,

 லஞ்ச ஒழிப்பு துறையில் இயக்குனரையே சிலர் பதம் பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 இது பற்றின விவரம் வருமா

 தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனராக, அபய்குமார் சிங் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவர், தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளை வேலை வாங்குவல் கறாராவர்.

 என்ன செய்வது விதி வலியது, அரசியல் செல்வாக்கு பெரியது அல்லவா.   அவைதான் இவரை செயல்படவிடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

   சி.பி.ஐ.,யில் பணிபுரிந்த, ஐ.பி.எஸ்., அதிகாரி ஒருவர், கோட்டை வட்டாரத்தில் உள்ள நெருக்கம் காரணமாக, இயக்குனரை ஓரம் கட்டுவதாகவும், துறை ரீதியான பல்வேறு விஷயங்களை, அவரின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

  குறிப்பாக ஆளுங்கட்சியினரும் புகுந்து அரசியல் செய்வதால், லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு குழப்பங்கள் நடப்பதாகவும், தனக்கு முக்கியத்துவம் தரப்படுவது இல்லை என, இயக்குனர், 'அப்செட்' ஆகி இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள சிலர் புலம்புகிறாரார்களாம்.

   மேலும், 30 ஆண்டுகளாக துறையில் கோலோச்சி வரும் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, துறையில் நடக்கும் திரைமறைவு வேலைகள் அனைத்தும் அத்துப்படி என்பதால் மேற்படி இயக்குநரின் ஸ்டிரிக்ட் பாலிசி அவரை பயனடைய விடாமல் தடுக்கிறதாம்.

  ஆகவே அவரை ரகசியமாக கண்காணிக்க துவங்கப்பட்டதாம்.

 இதையறிந்த பழம் திண்று கொட்டை போட்ட அவர் விருப்ப ஓய்வில் செல்ல முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.    

 மேலும் லஞ்ச ஒழிப்பு துறையில் உள்ள, சில, அதிகார மிக்க அதிகாரிகள் தரும் நெருக்கடியால், இயக்குனர் கூட விரைவில் மாற்றப்படலாம் என, லஞ்ச ஒழிப்பு துறை வட்டார தகவல்கள் கசிகின்றன.