சிறைக் கைதிகளுடன் மனைவிகள் பேச இன்டர்காம்!உளவுத்துறைக்கு வசதி!

ஜி.கே.சேகரன்,
வேலூர் மத்திய சிறையில் சிறைவாசிகளுடன் உறவினர்கள் இண்டர்காம் போன் மூலம் பேசும் புதிய வசதி துவக்கம்
வெளிநாடுகளில் உள்ளதை போல் இண்டர்காம் போன் மூலம் பார்த்துகொண்டே பேசும் புதிய வசதி வேலூர்மாவட்டம்,வேலூர் மத்திய சிறையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
சிறைவாசிகளும் அவர்களது மனைவி மற்றும் உறவினர்கள் ஒரே நேரத்தில் கம்பிகளுக்கு இருபக்கமும் பேசுவது கூச்சலாக இருக்கும். என்ன பேசுகிறார்கள் என்பது புரியாது.
இதை உளவுத் துறையினரும் சரியாக புரிந்துக் கொள்ள முடியாது.
இதனால் தமிழகம் முழுவதும் சிறைத்துறை சார்பில் இண்டர்காம் போன் மூலம் பேசும் வசதியை சிறைத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
வேலூரில் சிறைத்துறை டி.ஐஜி செந்தாமரை கண்ணன் இதனை துவங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை எஸ்பி அப்துல் ரகுமான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
வேலூர் சிறையில் 10 இண்டகாம் போன் வசதி அமைக்கப்பட்டுள்ளது இந்த நவீன வசதி மூலம் பேசுவது தெளிவாகவும் எந்த வித இடையூறும் இன்றியும் அவர்களுக்கு கேட்கும் வகையிலும் பார்த்துகொண்டே பேசும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.