நறுவீ மருத்துவமனை சிறப்பாக அமைந்துள்ளது! புருண்டி நாட்டு தூதர் பாராட்டு!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் நறுவீ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் கடைபிகப்பட்டது. அதில் புருண்டி நாட்டு தூதர் மேதகு ஸ்டெல்லா புத்ரிகன்யா கலந்துக் கொண்டு நறுவீ மருத்துவமனை சிறப்பாக அமைந்துள்ளது என்றார், மேலும் செவிலியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
வேலூர் நறுவீ மருத்துவமனையில் நடைபெற்ற சர்வதேச செவிலியர் தின விழாவில் இந்தியாவிற்கான புருண்டி நாட்டு தூதர் மேதகு ஸ்டெல்லா புத்ரிகன்யா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து கூறூகையில், புருண்டி மருத்துவமனையில் நறுவீ மருத்துவமனையின் முக்கிய மருத்துவத்துறை ஒன்றை ஏற்படுத்த விரைவில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்படி நிகழ்ச்சிக்கு மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமை வகித்தார் . நிகழ்ச்சிக்கு வருகை தந்தவர்களை மருத்துவமனை செவிலியர் தாரகேஸ்வரி வரவேற்றார் . சர்வதேச செவிலியர் தின விழாவை பற்றி மருத்துவமனை முதுநிலை செவிலியர் சுகன்யா பிரியதர்ஷினி விளக்கி கூறினார் .
விழாவையொட்டி நடத்தப்பட்ட கட்டுரை, விளம்பர சுவரொட்டி உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவற்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி மேதகு தூதர் பேசுகையில், நறுவீ மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தின விழாவில் பங்கேற்றதில் பெறும் மகிழ்ச்சி அடைகிறேன்.
செவிலியர்கள் மக்களை காப்பாற்றும் சிறப்பான பணியை செய்து வருகின்றனர். மனித நேயமிக்க அவர்களின் பணிக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக சர்வதேச செவிலியர் அமைப்பு ஆண்டு தோறும் இந்த விழாவை நடத்தி வருகின்றது. புருண்டி நாடு, இந்தியா , இந்தோநேசியா , சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுடன் நட்புறவை கொண்டுள்ளது.
இந்தியாவில் மருத்துவத்துறை சிறப்பாக உள்ளது. மருத்துவ பரிசோதனைகள் மூலமாக துல்லியமாக கண்டறிந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
புருண்டி மருத்துவமனை அந்நாட்டு மக்களுக்கு மருத்துவ சேவை சிறப்பாக அளித்து வருகிறது . புருண்டி மருத்துவமனைக்கு மருத்துவர்கள் , செவிலியர்கள் அதிக அளவில் தேவைப்படுகின்றனர் . இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மூலம் அதை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறோம் .
இந்தியாவில் ஐந்து ஆண்டுகளாக தூதராக இருந்து வருகிறேன். குறிப்பாக தமிழ்நாட்டு மக்களின் மொழி , பண்பாடு , கலாச்சாரம் , பல்வேறு நாட்டு மக்களை கவரும் தனித்தன்மை கொண்டதாக உள்ளது . இதன் காரணமாக, என்னுடைய மகனும் தமிழ்நாட்டில் ஒரு கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளது மகிழ்ச்சிக்குறியது.
தமிழர்கள் தங்களின் தமிழ் மொழி மீது அதிக பற்று உடையவர்களாக விளங்கி வருவது பெருமையாக உள்ளது . உள்ள நறுவீ மருத்துவமனையில் நடைபெறும் செவிலியர் தின விழாவில் பங்கேற்பதற்காக வந்த நான் மருத்துவமனை வளாகத்தை சுற்றி பார்த்தபோது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பு கிடைத்தது.
இங்கு அனைத்து மருத்துவ வசதிகளும் அமைந்துள்ளது சிறப்புக்குறியது. எங்கள் நாட்டின் புருண்டி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நலனுக்காக வேலூர் நறுவீ மருத்துவமனையின் முக்கிய துறை ஒன்று அங்கு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் . இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் நறுவீ மருத்துவமனை துணைத் தலைவர் அனிதா சம்பத் , செயல் இயக்குநர் டாக்டர் பால் ஹென்றி , மருத்துவ சேவைகள் துறை தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் , மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ஜேக்கப் ஜோஸ் , தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் , தலைமை நிதி அலுவலர் வெங்கட்ரங்கம் , பொது மேலாளர் நிதின் சம்பத் மற்றும் மருத்துவர்கள் , செவலியர்கள் , ஊழியர்கள் பலர் பங்கேற்றனர் . முடிவில் மருத்துவமனை செவிலியர் கிளாரா வின்னரசி நன்றி கூறினார்.