குறைகளை வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டாம்! வேலூர் ஆட்சியர் வேண்டுகோள்!!

கு.அசோக்,
வேலூர் ஆட்சியர் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுதாரர்கள் குறைதீர்வு கூட்டம் குறைகளை நேரில் வந்து தெரிவியுங்கள் நடவடிக்கை எடுக்கிறேன் வாட்ஸ் அப்பில் பதிவிட வேண்டாம் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேச்சு
வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் சுதந்திர போராட்ட தியாகிகள் அவர்களின் வாரிசுதாரர்களின் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
இதில் சுதந்திர போராட்ட தியாகிகள் அவர்களின் வாரிசுகள் பங்கேற்று தங்களுக்கு வீட்டுமனைகள் வேண்டுமெனவும் மேலும் மாவட்டத்தின் சார்பில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்றனர்.
மேலும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் பேருந்து நிலையங்களில் உள்ள கடைகளில் சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும், முதியோர் பென்ஷன் பெற தகுதியுடையவர்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து பேசினார்கள்
இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசுகையில் சுதந்திர போராட்ட வீரர்களும் அவர்களின் வாரிசுகளும் குறைகளை வாட்ஸ் ஆப் மூலம் பரப்ப வேண்டாம் நேரடியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து தெரிவித்தால் நான் நடவடிக்கை எடுக்கிறேன் உங்கள் கோரிக்கையை பரிசீலித்து செய்து தர முயற்சி செய்வதாக கூறினார்.
சுமூகமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.