மகாத்மா காந்தியின் கனவை நனவாக்குவோம்! திருப்பத்தூர் ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி!

ஆர்.ரமேஷ்,
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இதன் அடிப்படையில் நடைபெற்ற சுகாதார பேரவையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசின் பார்வைக்கு சமர்ப்பிக்கப்படன.
தொடர்ந்து இக்கூட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களின் நினைவு தினத்தையொட்டி ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ் இ.ஆ.ப. அவர்கள் தலைமையில்அரசு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழி மகாத்மா காந்தி நினைவு தினத்தில் உறுதிமொழி ஏற்கிறேன். தொழுநோய் மைக்கோ பாக்டீரியம் லெப்ரே என்ற பாக்கடீரியா கிருமியினால் காற்றின் மூலம் பரவுகிறது என்பதனை நான் அறிவேன்.
உணர்ச்சியற்ற தேமல்,படை போன்ற தோல் நோய் உள்ளவர்களையோ அல்லது தொழுநோயினால் உடல் குறைபாடு உள்ளவர்களையோ எனது குடும்பத்திலோ அல்லது வீட்டின் அருகிலோ இருந்தால் உடன் அவர்களை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை எடுக்க ஏற்பாடு செய்வேன்.
அவர்களை அன்பாகவும் எனது குடும்ப உறுப்பினர்கள் போலவும் வேறுபாடு இல்லாமல் உரிய மரியாதையுடன் நடத்துவேன். தொழுநோய் முற்றிலும் குணமாகக் கூடியது. ஆரம்ப நிலை சிகிச்சை உடல் குறைபாட்டை ஏற்படுத்தாதது.
தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை ஒதுக்கக்கூடாது போன்ற விபரங்களை அண்டை அயலாருக்குத் தெரிவித்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவேன்.
தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் தொழுநோய் இல்லாத இந்தியா உருவாக அனைவருடன் இணைந்து ஒத்துழைப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன்.
களங்கம் தவிர்ப்போம், கண்ணியம் காப்போம் என்ற ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு உறுதிமொழியினை
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் அரசு துறை அலுவலர்கள்
ஏற்றுக்கொண்டனர்.
மேலும் தொழுநோயால் பாதிக்கப்பட்ட பயானளிக்கு காலணிகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் டாக்டர்.உமாமகேஸ்வரி, துணை இயக்குநர்
சுகாதாரப்பணிகள் மரு.செந்தில், துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (தொழுநோய்) மரு.பிரித்தா,ஜோலார்பேட்டை ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.சத்யா சதீஷ்குமா£, ஜோலார்பேட்டை நகரமன்ற தலைவர்
திருமதி.காவியா விக்டர், ஆலங்காயம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.சங்கீதா,ல் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.