லஞ்ச ஒழிப்பு போலிசார் பொறியில் சிக்கிய சார்பதிவாளர்! உதவியாளருடன் கைது!

ஆர்.கே.பேட்டை.முரளி,
செல்வ ராமசந்திரன் என்பவர் திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதி வாளராக பணியாற்றி வருகிறார். இவரிடம் திருத்தணி அருகே மத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவர் ஆர்.கே.பேட்டை அருகே விளக்கணாம்பூடி புதூ£ ¢கிராமத்தில் பதிவு செய்ப்பட்ட, நில பத்திரப்பதிவு ஆவணங்களை மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வழி காட்டி மதிப்பீடு செய்ய அனுப்பி வைக்கும்படி கோரியிருக்கிறார்.
அதற்கு சார் பதிவாளர் செல்வ ராமச்சந்திரன் ரூ.50 ஆயிரம் லஞ்சமாக கேட்டு வற்புறுத்தியுள்ளார். இதற்கு நில தரகர் ஜெய்சங்கர் ரூ.35 ஆயிரம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ஜெய்சங்கர் இது குறித்து திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார்.
உஷாரான லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் போலீசார் ஆர்.கே.பேட்டை சார் பதிவாளர் அலுவலகம் அருகே வந்திறங்கி அங்கு நோட்டமிட்டனர்.
புகாரில் தெரிவித்தத்தைப் போலவே ஜெய்சங்கர் ரூ.35 ஆயிரம் பணத்தை சார் பதிவாளர் செல்வ ராமச்சந்திரனுக்கு கொடுக்க முயன்றார். அந்த பணத்தை சார் பதிவு அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரியும் சிவலிங்கம் என்பவர் பெற்றுக்கொண்டு சார்பதிவாளர் செல்வ ராமச்சந்திரனின் காரில் வைத்தார்.
இவற்றையெல்லாம் அங்கு மறைந்திருந்து நோட்டமிட்ட லஞ்ச ஒழிப்பு போலிசார்¢ உதவியாளர் சிவலிங்கம், சார்-பதிவாளர் செல்வ ராமச்சந்திரன் ஆகியோரை அமுக்கினர்.