பொய் வழக்கு போடும் வனத்துறை!அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

பொய் வழக்கு போடும் வனத்துறை!அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள்!

  ஜி.கே.சேகரன்,

 வனவிலங்குகளை துன்புறுத்தியதாக விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுவதாக வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் வனதுறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் - மேல் ஆலங்குப்பம் பகுதியில் கல்குவாரியில் மாசு ஏற்படுவதாகவும் நிலத்தடிநீரும் பாதிப்பதாக விவசாயிகள் புகார்.

 வேலூ£ மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டமானது நடந்தது. இக்கூட்டத்தில் அனைக்கட்டு. கேவிக்குப்பம். குடியாத்தம். பேர்ணாம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த திரளான விவசாயிகளும். பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

 இந்த கூட்டத்தில் நூறு நாள் வேலை பணியாளர்களை விவசாய பணிகளுக்கும் அனுப்ப வேண்டும், மேலும் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்க வேண்டும், விவசாயிகளின் மீது வனத்துறையினர் பொய் வழக்கு போடுகின்றனர்.

 வனவிலங்குகளால் பயிர் சேதமடைகிறது ஆனால் அவைகளுக்கு உரிய இழப்பீடோ பாதுகாப்போ செய்து தருவதில்லை.

 ஆனால் விவசாயிகள் மீது மட்டும் பொய் வழக்கை போடுவது எந்த வகையில் நியாயம் என கேட்டு வனத்துறை அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

 மேலும் பேர்ணாம்பட்டு அருகேயுள்ள மேல் ஆலங்குப்பம் பகுதியில் செயல்படும் கல்குவாரியால் விவசாய பயிர்கள் பாதிக்கபடுகிறது நிலத்தடி நீரும் மாசடைகிறது அதிக வெடிகளை பயன்படுத்துவதால் வீடுகளில் விரிசல் ஏற்படுவதாக கூறி மனுவை அளித்தனர்.