வேலூர் திருப்பத்தூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம்! பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முழங்கினர்!

வேலூர் திருப்பத்தூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் போராட்டம்! பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற முழங்கினர்!

கு.அசோக், ஆர்.ரமேஷ்,

தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிட கோரி  தமிழக அரசைக்கண்டித்து வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரில்  ஜாக்டோ ஜியோ மறியல் போராட்டம்

  வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் பழைய  ஓய்வூதிய  திட்டம்  நடைமுறை படுத்த  கோருதல்  உள்ளிட்ட  9அம்ச  கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரி   ஜாக்டோ - ஜியோ சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் ஜனார்த்தனன் தலைமையில்நடைபெற்றது.

 புதிய ஓய்வூதி திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்கிட கோருகின்றோம். இடைநிலை ஆசிரியர்களுக்கும், உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் உடற்கல்வி ஆசிரியர்களக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.

  முதுகலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் தலைமைச்செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள் ஊர்த்தி ஓட்டுநர்கள்ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும். 

  கல்லூரி பேராசிரியர்கள் நிலுவயிலுள்ள பணி மேம்பாடு உடனடியாக வழங்கிட வேண்டும்.  மேலும் மேல் நிலைப்பள்ளிகிளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியர்களாக உட்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்ற வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், எம்.ஆர்.பி.செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள், ஆகியோருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 

  மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள 6 லட்சத்திற்கு மேற்பட்ட பணி இடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 

  தனியார் வெளிமுகமை ஒப்பந்தம், தற்காலிகம், உள்ளிட்ட முறைகளை கைவிட்டு சமூக நீதி காத்திட நிரந்தர பணியிடங்களில் நிரப்பிட வேண்டும்.21-மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும் 2003 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்டுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டம்

திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு  பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் மறியல் போராட்டம்-300-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.

   திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பழைய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்த கோரிக்கை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி சங்க மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைப்பெற்றது.

  இந்த போராட்டத்தில் ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஞானசேகரன், மு.சிவக்குமார் மேகநாதன் சிவலிங்கம் தேசிங்குராஜா நேரு பிரேம்குமார் பாண்டியன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு ஊழியர்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த போராட்டம் சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சரண்டர் விடுப்பு தடை ஆணையை நீக்க வேண்டும்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடை கலைத்தல் வேண்டும்.சத்துணவு அமைப்பாளர்களுக்கு காலம் முறை ஊதியம் வழங்கப்பட வேண்டும். உயர் கல்விக்கு ஊக்க ஊதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.பின்னர்  கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.