பிச்சை எடுக்க போகிறேன் என்று கிண்டல் செய்கிறார்கள்! மலை கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய நடிகர் பாலா வருத்தம்!

ஜி.கே.சேகரன்,
அடிதட்டு மற்றும் ஏழை மக்களுக்காக சேவை செய்வது பெருமையாக உள்ளது என சின்னதிரை புகழ் பாலா
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட நெக்னாமலை கிராமத்தில்
சுமார் 172 குடும்பங்களில் 750 பேர் வசித்து வருகின்றனர். 478 வாக்காளர்கள் கொண்ட இந்த மலை கிராமத்திற்கு சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து இன்று வரை சாலை வசதி இல்லாததால் தொடர்ந்து மக்கள் அன்றாட தேவைக்கும் மற்றும் மருத்துவ தேவைக்கும் 7 கிலோமீட்டர் நடந்தே சென்று வரக்கூடிய சூழ்நிலையாக உள்ளது.
இதனால், கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவ வலி ஏற்பட்டாலும் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் டோலி கட்டி தூக்கிச்செல்லும் நிலை தொடாகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சியின் போது மலை கிராமத்திற்கு மண் சாலை அமைத்துக் கொடுக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்திற்கு பின் அப்பகுதி மக்களுக்கு சாலை அமைத்துக் கொடுப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெண் ராஜேஸ்வரி என்பவருக்கு பிரசவ வலி காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் அவரை டோலி கட்டி தூக்கி சென்று அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
இது குறித்து செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியானது. இதனை அறிந்த சின்னத்திரை நடிகர் (கே.பி.ஒய்) பாலா நெக்னாமலை மலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் சேவை வழங்க கடந்த மாதத்தில் இருந்து அதற்கான பணிகள் மேற்கொண்டு வந்த்ஷ்ர்.
அதில் தற்போது அவர் நேரில் அந்த மலைக்கிராமத்துக்கு சென்று சுமார் 6 லட்சம் மதிப்பிலான புதிய ஆம்புலன்ஸ் ஒன்றை மலை கிராம மக்களுக்கு வழங்கி ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார். அப்போது அவருக்கு மலை கிராம மக்கள் பட்டாசு வெடித்தும் ஆரத்தி எடுத்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாமல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு டோலி கட்டி தூக்கிச் சென்ற செய்தியை தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் பார்த்ததாகவும், ஏற்கனவே ஈரோடு அறந்தாங்கி, சோலைக்கணை ஆகிய பகுதிகளில் இலவச ஆம்புலன்ஸ் சேவை அளித்துள்ள நிலையில் ஐந்தாவதாக வாணியம்பாடி நெக்னமாலை பகுதிக்கு வழங்கி உள்ளதாக சொன்னார்.
மேலும், இதனை சிலர் இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் தவறாக சித்தரித்து பாலாவுக்கு பின்னாடி யாரோ இயக்குகின்றனர் எனவும், இது போன்ற செயலில் ஈடுபட்டால் வாழ்க்கையில் பின்னாடி பிச்சை எடுக்கும் சூழல் ஏற்படும் அப்போது நான் பிச்சை போட மாட்டேன் என சிலர் அவரைப்பற்றி பதிவு செய்துள்ளதாக வருத்தம் கலந்து சொன்ன அவர், அதை எல்லாம் தாண்டி இதுபோன்ற அடித்தட்டு மற்றும் ஏழை மக்களுக்காக உதவி செய்வதில் நான் பின்வாங்க மாட்டேன்.
தன்னுடைய சொந்த பணத்தில் இது போன்ற சேவைகளை செய்து வருவதாக தெரிவித்த அவர் இதற்கெல்லாம் ஒத்துழைப்பு அளித்து அன்பும் ஆதரவும் கொடுத்து வரும் மக்கள் ஆதரவுடன் இன்னும் 5 ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைப்பேன் எனவும் தெரிவித்தார்.
மக்களை ஏமாற்றி ஓட்டு பெற்று அதிகாரத்தில் அமர்ந்துள்ளவர்களுக்கு இது பற்றி கொஞ்சம் கூட கூச்சமே இல்லையா? என்று மக்கள் கேட்கிறார்கள்.