லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா!

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
வெளிநாட்டுக்கு சென்று திரும்பிய நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
லண்டனில் இருந்து சென்னை திரும்பிய வடிவேலுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தற்போது அவர் போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 10 தினங்களாக லண்டனில் இருந்த வடிவேலு, நேற்று சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.