வேலூர் சரக டி.ஐ.ஜி. பதவியிலிருந்து ஆனி விஜயா நீக்கப்பட்டார்! மந்திரிக்கு தொல்லை?- அடேங்கப்பா கலெக்ஷன்?இதுதான் காரணமாம்!?!

ம.பா.கெஜராஜ்,
வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டவர் ஆனி விஜயா இ.கா.ப., அவர் பதவியேற்ற புதியதில் போலிஸ்காரர்கள் முதல் எஸ்.பி. வரை சூப்பர் ஆபிசர் என்று பாராட்டினர்.
ஆனால் நாட்கள் கடந்த போது அவர் மீது அவ்வளவு நல்ல அபிப்பிராயம் வரவில்லையாம்.
அவர் வேலூருக்கு வந்தவுடன் அலுவலகத்தில் காலம் காலமாக இருந்த மைக் மற்றும் வெயிட்டிங் அறையை எந்த அனுமதியும் இன்றி மாற்றி அவர் ஓய்வு எடுப்பதற்கு ஏதுவாக கட்டில் வசதியோடு மாற்றிக் கொண்டாராம். அதற்கு பதிலாக கான்ப்ரன்ஸ் ஹாலை மைக் மற்றும் வெயிட்டிங் அறையாக பயன்படுத்த பணித்துவிட்டார்.
அதே போல் வாஸ்த்து முறைப்படி அவரது இருக்கை மற்றும் மேஜையை மாற்றிக் கொண்டு அங்கு அடியாட்களைப்போல நான்கு ஆர்டியலர்களை நியமித்துக் கொண்டார் என்கிறார்கள். புகார்தாரர்கள் மற்றும் பார்வையாளர்களிடம் பவுன்சர்களைப்போல அவர்கள் நடந்துக் கொண்டனர்.
இந்நிலையில் அவர் இன்று திடீரென்று நீக்கப்பட்டு, காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறார்.
இந்த செய்தி வெளியானவுடன் பல்வேறு தகவல்கள் அவரை குறித்து வந்தபடி இருந்தன.
அவை என்னவென்று பார்கலாம் வாங்க.
*திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் க.தேவராஜி. இவர் மேற்கு மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார். அவரது உறவுக்கார பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் பணியிடமாறுதல் கோரி டி.ஐ.ஜியை அனுகினாராம். ஆனால் அந்த இன்ஸ்பெக்டரின் கோரிக்கையை டிஐஜி புறக்கணித்துள்ளார். ஓ.சி யாக செய்யமுடியாது என்று திருப்பி அனுப்பப்பட்டாராம். இதனால் மனம் கசந்த அந்த இன்ஸ்பெக்டர் உறவுக்காரரான மேற்படி எம்.எல்.ஏ.விடம் சொல்லியுள்ளார். அதைக்கேட்டுக் கொண்ட அவர் டிஐஜிக்கு மூன்று தடவை சொல்லியிருக்கிறார்.
ஆனால் அந்தம்மா கண்டு கொள்ளவேயில்லையாம். இதனால் வெறுப்படைந்த எம்.எல்.ஏ. இந்த விவகாரத்தை அமைச்சர் ஒருவரின் பார்வைக்கு கொண்டு சென்று அண்ணே இது எனக்கு கவுரவ பிரச்சனை என்று கண் சிவந்துள்ளார். அதன் பின்னர் அந்த இன்ஸ்பெக்டர் திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து திருப்பத்தூருக்கு மாறுதல் பெற்றார். ஆனாலும் இன்னும் பணியிடம் மாறவில்லை. இந்த விவகாரத்தினால் ஆளுங்கட்சியில் சற்று மனப்புழுக்கம் இருந்தது.
இத்தனைக்கும் அந்த பெண் இன்ஸ்பெக்டர் நற்சான்று பதக்கங்களைப் பெற்றவராம்.
*இந்த பிரச்சனையின் வடு ஆறுவதற்கு முன் இந்த மேடத்தை மையப்படுத்தி அதே அமைச்சரின் பார்வைக்கு இன்னொறு விவகாரம் சென்றதாம். அது பற்றி நமக்கு சிலர் தெரிவித்ததை இங்கே குறிப்பிடுகிறோம். அரக்கோணம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேதுபதி. அவர் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. குறிப்பாக கை நீளமாம். இந்நிலையில் அவர் தென் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார்.
அப்படியிருக்க சேதுபதி ஓடோடி வந்து மேடத்தை பார்த்து சுமார் எட்டு லகரத்தை தட்டிவிட்டாராம். அதன் பின்னர் சேதுபதி இன்ஸ்பெக்டரின் தென்மாவட்ட டிராஸ்பரை கேன்சல் செய்து அவரை ஆற்காடு தாலுக்கா காவல் நிலையத்துக்கு மாற்றி பிசினஸ் டீலை முடித்தார் மேடம்.
இதையறிந்த ஆற்காடு தாலுக்கா இன்ஸ்பெக்டர் காண்டீபன் என்பவர், அவர் பங்குக்கு ஓடோடி சென்று அமைச்சர் முன் நின்றுவிட்டார்.
அய்யோ அண்ணே காப்பாற்றுங்க, என்னை டிஸ்டர்ப் செய்து சேதுபதியை இங்கே கொண்டுவராங்க. எல்லாமே பேரம் தான் என்று புலம்பியிருக்கிறார்.
இது குறித்து மந்திரி தரப்பிலிருந்து மேடத்துக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஆனால் மேடம் எதிர்த்து பேசினாராம்.
*மேடம், சமீபத்தில் நடந்த போலீஸ் மீட்டிங்கில் எல்லோரையும் வெளுத்து வாங்கியிருக்கிறார். பல இன்ஸ்பெக்டர்களை ஒருமையில் பேசி, உனக்கு யார் சப்போர்ட்? நீ எந்த கட்சியை சேர்ந்தவன், நாமெல்லாம் அதிகாரிங்க, அரசியல்வாதிகள் சும்மா ஐந்து வருஷம் தான் என்று சவுண்டு விட்டாராம். அப்போது அங்கிருந்த ஒரு இன்ஸ்பெக்டர் நீங்க பணம் வாங்காமல் எதைத்தான் செய்யறீங்க என்று முனுமுனுத்துள்ளார். இதையெல்லாம் உளவுத்து¬றையைச் சேர்ந்தவர் உயர் அதிகாரிக்கு மிகச்சரியாக நோட் போட்டு கொடுத்துள்ளார்.
இவரால் ஆளுங்கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் என்றும் தெரிவிக்கப்பட்டதாம்.
* வேலூர் பள்ளி கொண்டான் காவல் நிலையத்தில் இருந்த பெண் இன்ஸ்பெக்டர் மீது ஏகப்பட்ட அலிகேஷனாம். அதை வைத்து மேடம் ஐந்து லகரம் கை நீட்டிவிட்டாராம். அதற்கு விசுவாசமாக நடவடிக்கை ஏதும் எடுக்காமல் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்துக்கு அந்த இன்ஸ்பெக்டரை மாற்றுவதாக டீலாம். ஆனால் பணம் கைமாறியவுடன் அந்த பெண் இன்ஸ்பெக்டரை ஸ்டேஷனிலிருந்து கழற்றிவிட்டுட்டாராம் மேடம். இதனால் அவர் தரப்பில் மேலதிகாரிகள் வரை தகவலை பரப்பிவிட்டனராம்.
* அதே போல் இவரிடம் அளிக்கப்படும் பெட்டிஷனாகட்டும், பணியிட மாறுதல் மனுவாகட்டும், எதுவாயினும் அதை முடித்து கொடுக்க இடைத்தரகர் ஒருவர் சென்னையிலிருந்து வேலூருக்கு வந்து தங்குகிறாராம்,
*மேலும் மேடம் நீக்கப்பட்டதற்கு பைனான்ஸ் முறைகேடு மற்றும் கள்ளக்குறிச்சியில் அவரை டுயூட்டி போட்ட போது செய்த லூஸ்டாக் போன்றவையும் காரணம் என்று உறுதிபடுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன.
*இந்நிலையில் குடியாத்தம் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னை பேர்னாம்பட்டு இன்ஸ்பெக்டராக மாற்ற கோரி மேடத்திடம் மூன்று லகரத்தை கொட்டினாராம். ஆனால் பணியிடமாறுதல் வருவதற்குள், மேடத்துக்கே மாறுதல் வந்துவிட்டதால் குடியாத்தம் மேடம் துக்கம் தாளமுடியாமல் தவிக்கிறாராம். (கஷ்டபட்டு சேர்ததாயிற்றே).
இந்நிலையில் ஆனி விஜயாவுக்கு பதிலாக காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா ஐ.பி.எஸ். அவர்களுக்கு கூடுதலாக வேலூர் சரகம் அளிக்கப்பட்டிருக்கிறது.
வேலூர் சரகத்தை பொறுத்தவரை வால்டர் தேவாரம் இ.கா.ப. முதல் ஏ.ஜி.பாபு.இ.கா.ப வரை மிக,மிக கன்னியமான ஆபிசர்ஸர்களை சந்தித்திருக்கிறது. பெண் டிஐஜிக்கள் என்று சொன்னால் லஷ்மி பிரசாத் இ.கா.ப., வனிதா,இ.கா.ப., காமினி இ.கா.ப. ஆகியோரை மக்கள் மறக்கவே மாட்டார்கள்.
இவரையும் தான்?!!