சித்தூர் போலிசாரை திணறடித்த சந்திரபாபு நாயுடு!

வி.டி.வித்யா,
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று சித்தூர் வருகைதந்தார். அவரது வருகையை பொதுமக்கள் வெகுவாக கொண்டாடியதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் போலிசார் திக்குமுக்காடினார்கள்.
இது பற்றின விவரம் வருமாறு,
ஆந்திர மாநிலம் குப்பம் தொகுதியின் எம்.எல்.ஏ. வாக சந்திரபாபு நாயுடு தொடர்ந்து இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அந்த தொகுதிக்கு தற்போதைய முதலமைச்சர் ஜெகன்மோகன் வந்தார். அவரது வருகையை அடுத்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் ஜெகனின் தோரணங்களை சரமரியாக கட்டி கலர் காட்டினார்கள்.
இதைப் பார்த்த தெலுங்கு தேச பார்டிகாரர்கள் காண்டு ஆகிவிட்டனர்.
பின்னர் ஜெகன் படம் போட்ட அனைத்து பேனர்கள் மற்றும் கொடிகளை பிய்த்து கடாசினர்.
இதனால் இருகட்சியினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இந்த கூத்துகள் நடந்து முடிந்த பின்னர் தெலுங்கு தேச கட்சியைச் சேர்ந்த சுமார் முப்பது பேர் மீது போலிசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை சித்தூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.
இது வழக்கமாக நடக்கும் செயல்தான் என்றாலும் கூட, இந்த வழக்கில் குப்பத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.சி.யும், பிரபலமானவருமானவருமான சீனிவாசலு என்பவரும் பிடிபட்டிருக்கிறார். இந்நிலையில் அவர் உட்பட சிறையிலுள்ள முப்பது தெலுங்கு தேசகட்சினரை, கட்சிக்காரர்களோ அல்லது உறவினர்களோ மனு போட்டு பார்க்கக்கூடாது என்று சிறை அலுவலர்கள் கடுமை காட்டுகிறார்கள்.
இந்த தகவல் தலைமை வரை சென்றதும், பொங்கி எழுந்த சந்திரபாபு நாயுடு புறப்பட்டு சித்தூர் சிறைக்கு வந்தார். வந்தவர் அங்கு அடைத்துவைக்கப்பட்டிருந்த தொண்டர்களை பார்த்து கண்ணீர் வடித்தார். பதிலுக்கு தொண்டர்களும் கண்ணீர்விட்டனர்.
அய்யாகாரு எங்களை பார்க்க யாரையுமே அனுமதிக்கவில்லை என்று புகார் வாசித்தார்கள். பொறுமையாக இருங்கள் சட்டபடி இதை அனுகலாம் நான் பார்த்துக்குறேன் என்று ஆறுதல் சொல்லிவிட்டு பின்னர் சிறையிலிருந்து புறப்பட்டார்.
அதே போல் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா என்பவரை போலிஸ் இன்ஸ்பெக்டர் கார் ஏற்றி கொல்ல முயன்றார். அதில் ஹேமலதா காயம்பட்டார்.
மேலும் ஹேமலதாவின் கணவர், அவரது மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துவிட்டனர்.
ஆகவே அவரது வீட்டுக்கு சென்ற சந்திரபாபு நாயுடு அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியதோடு அங்கு சற்று நேரம் பேசிவிட்டு சென்றார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடு வருகையின் போது போலிசார் பெரிய ரிஸ்க் எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மேலிடத்து தகவல்கள் வந்ததாம்.
ஆனால் சந்திரபாபு நாயுடுவை வரவேற்க பெருங்கூட்டம் சேர்ந்துவிட்டதால் போலிசார் மேலிடத்தில் திட்டு வாங்கிக்கொண்டே பாதுகாப்பு பணியை செய்தனர்.