. ஐந்து மாநில தேர்தலில் பாஜக கை ஓங்குகிறதாம்! சொல்வது எக்ஸீட் போல்!

ம.பா.கெஜராஜ்,
ஐந்து மாநில தேர்தல் - வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்கிற பெயரில் வட இந்திய ஊடகத்தினர் அலப்பரை செய்துள்ளனர்.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய மாநில சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியீடு என்று சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
அந்த வகையில் உத்ரகாண்ட் மாநிலம் உத்ரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க
வைக்குமென ரிபப்ளிக் டி.வி கருத்து கணிப்பு சொல்லுது. டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் உத்ரகாண்டில் பா.ஜ.க.வுக்கு நூலிழை பெரும்பான்மை கிடைக்குமென தகவல்.
அதே போல் உத்தரபிரதேசத்த்தில் பா.ஜ.க.வே ஆட்சி அமைக்கும் என ரிபப்ளிக் டிவியும், என்டிடிவியும் கோரஸாக சொல்கிறார்கள்.
அதே நேரத்தில் உத்ரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்குமென ஏ.பி.பி. சிவோட்டர் கருத்து கணிப்பு சொல்கிறாது.
கோவா மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியை தக்க வைக்குமென ரிபப்ளிக்
டி.வியும், கோவாவில் எந்த கட்சிக்கும் அறுதி பெரும்பான்மை கிடைக்காது என என்.டி.டிவி கருத்து கணித்துள்ளன.
மணிப்பூரிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்க வைக்குமென ரிபப்ளிக் டிவி கருத்து கணிப்பு சொல்கிறது.
இவ்வளவு சொன்னவர்கள் பஞ்சாபை பற்றி பெரிதாக கருத்து எதையும் வெளியிடவில்லை.