'டிங்கிடி டிங்காலே, பாட்டு பாடிய காமெடி பீஸ் ஜெயக்குமார்!

ம.பா.கெஜராஜ்,
'டிங்கிடி டிங்காலே மீனாட்சி டிங்கிடி டிங்காலே என்கிற பாடலை பாடி காமெடி பீஸாக மாறினார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
காய்கறி , மளிகைப் பொருட்கள் ஆகியவற்றின் விலையேற்றத்தை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
தமிழகம் முழுவதிலும் நடந்த இந்த ஆர்பாட்டத்தில், அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் போராட்டத்துக்கு வந்திருந்தார்.
அப்போது அவரது கழுத்தில் காய்கறி , மளிகைப் பொருட்களின் மாலையுடன் காட்சி தந்தார்.
அதை பார்த்த போராட்டக்காரர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் நெளிந்தனர்
அப்போது மைக்கை வாங்கிய ஜெயக்குமார், 'டிங்குடி டிங்காலே ..ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ' என்று பாடியதோடு போராட்டக்காரர்களையும் பின் பாட்டு பாடவைத்து காமெடி செய்துக் கொண்டிருந்தார்.
மேலும் காய்கறி , மளிகைப் பொருட்களின் விலை உயர்வை சுட்டிக்காட்டும் விதமாக கடுகு , சீரகம் , உளுந்தம் பருப்பு , கொண்டைக் கடலை , பொட்டுக் கடலை , வெந்தயம் , உப்பு , மிளகாய் , சேமியா பாக்கெட்டுகள் கோர்க்கப்பட்ட மாலை ஒன்றையும் , வெங்காயம், தக்காளி , வெண்டைக்காய் , கோவைக்காய் , பச்சை மிளகாய் கோர்க்கப்பட்ட மற்றுமொரு மாலையையும் கழுத்தில் அணிந்துகொண்டு ஜெயகுமார் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றார்.
திமுக ஆட்சி மற்றும் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், "டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே ..தலையில் துண்டு போட்டுகனு ங்கமே தில்லாலே..." என பாடல் பாடியதுடன் , இரண்டே மணி நேரத்தில் இப்பாடலை தான் எழுதியதாக கூறி கைதட்டலை பெற்றார்.