சொர்க்கமே என்றாலும் பாட்டு பாடி அசத்திய காக்கி சட்டை!
கே.ஏ.ஜெகதீஷ்வரி,
தீயணைப்பு அலுவலர் ஒருவர் பாடிய சொர்க்கமே என்றாலும் திருநெல்வேலி போல் ஆகுமா என்கிற பாடல் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ், அங்குள்ள தாமிரபரணி ஆற்றில், படகில் பயணித்தபடி ஏ....தந்தன தந்தன தந்தன.... சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலி போல ஆகுமா. அட எந்த ஆறு ஆனாலும் அது தாமிரபரணி போல ஆகுமா?
தினம் குப்பை கொட்டாம, அசுத்தம் செய்யாம தினமும் ஆறுகளை பாதுகாக்கனும்.... சொர்க்கமே என்றாலும் அது திருநெல்வேலி போல ஆகுமா. அட எந்த ஆறு ஆனாலும் அது தாமிரபரணி போல ஆகுமா? என்ற விழிப்புணர்வு பாடலை பாடி உள்ளார்.
இதை பள்ளி மாணவிகள் கரையிலிருந்தபடி கைதட்டி ஊக்குவித்தார்கள்.
தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.