உர தட்டுபாட்டை போக்க அலுவலர்கள் முன்வருவதில்லை! விவசாயிகள் காட்டம்!!

உர தட்டுபாட்டை போக்க அலுவலர்கள் முன்வருவதில்லை! விவசாயிகள் காட்டம்!!

  கு.அசோக்,

  உரம் தட்டுபாடு ஏற்பட்டுள்ளதை போக்க வேண்டும், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை உடனடியாக திறந்து அரவையை துவங்க வேண்டும், கோமாரி தடுப்பூசியை மாவட்டம் முழுவதும் உடனடியாக அனைத்து கால்நடைகளுக்கும் போட வேண்டும் என விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

 வேலூர்மாவட்டம்,வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.

 இதில் விவசாயிகள் மற்றும் அனைத்துத் துறை அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  அப்போது, ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை துவங்கபடாமல் மூடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கரும்புகளை வேலூர் திருப்பத்தூர் ஆலைகளுக்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் கூடுதல் பணம் செலவு ஏற்படுகிறது.

 எனவே ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் திறந்து, அரவையை துவங்க வேண்டும்.

 தற்போது மழை பெய்து தண்ணீர் அதிக அளவு உள்ளதால் விவசாயிகள் பயிர் செய்ய வேண்டிய இந்த சூழ்நிலையில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் எங்கும் உரமில்லை உரத்தட்டுபாடு நிலவுகிறது.

 எனவே உரத்தட்டுபாட்டை போக்க வேண்டுமென கோரிக்கை வைத்தாலும் அலுவலர்கள் கண்டு கொள்வதில்லை.

 மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தாக்கம் அதிகமாக உள்ளது மாடுகள் இறந்துவிடுகிறது.

  இதனை காப்பாற்ற கால்நடைத் துறை மூலம் மாவட்டம் முழுவதும் கோமாரி நோய் தடுப்பூசியை போட வேண்டும்.

  ஏரிகள் மற்றும் ஆறுகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் சிறு தடுப்பணைகளை உடைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தனர். தற்போது நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் பேசினார்கள்.