இயற்கை விவசாயி உட்பட பத்திரிகையாளர்களுக்கு விருது!

இயற்கை விவசாயி உட்பட பத்திரிகையாளர்களுக்கு விருது!

கே.ஏ. ஜெகதீஸ்வரி,

   மக்கள் ஆணையம் இதழ் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மிஸ்டர் ஆணையர் விருதுகள் இந்த ஆண்டும் அளிக்கப்பட்டது. மதுரை லட்சுமி ஹோட்டல் கே. பி. எஸ் மஹாலில் சிறந்த சமூக சேவகர் மற்றும் சிறந்த பத்திரிகையாளருக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

    இந்த விழாவிற்கு மக்கள் ஆணையம் இதழின் ஆசிரியர் முத்தையா தலைமையற்றார். மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர் பழனி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

  விழாவில் வாழ்த்துரை வழங்கிய பார்க் பிளாசா ஹோட்டல் உரிமையாளர் நவநீதகிருஷ்ணன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் அழகேசன், த ம மு கழக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் சிறுதூர் கோபாலகிருஷ்ணன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் சிவகங்கை இளங்கோவன், தாணிக்கோட்டகம் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கறிஞர் ஐய்யப்ப ராஜா, மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் அருப்புக்கோட்டை செல்வகுமார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மூத்த பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

   இவ்விழாவில் சிறந்த சமூக சேவகர் விருதுகள் ரயில்வே அதிகாரி ஓய்வு சுந்தரராஜன் (வயது 102), உசிலம்பட்டி கவுன்சிலர் செல்வி அம்மா, இயற்கை விவசாயி கமுதி ராமர், இந்திய சுதந்திரக் தொழிற்சங்க கூட்டமைப்பின்  மாநிலத் தலைவர் சரவணன், பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி ராமராஜ், ஓய்வு பெற்ற ஆசிரியர் சங்கரன், மற்றும் கேட்டரிங் மற்றும் சுற்றுலா டிராவல்ஸ் நடத்தி வரும் லட்சுமி ஆகியோர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

  மேலும் சிறந்த பத்திரிகையாளராக மதுரை மாலை முரசு செய்தியாளர் பாரி, தூத்துக்குடி நியூஸ்7 தமிழ் செய்தியாளர் இசக்கி ராஜா, மக்கள் ஆணையம் செய்தியாளர்கள் வேலூர் விநாயகம், தேனி சரவணகுமார், சேலம் கலியன், அருப்புக்கோட்டை பார்த்தசாரதி மற்றும் மதுரை தினகரன் செய்தியாளர் (ஓய்வு) செய்யது மீரன் ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ஷீட் போர்வை வழங்கப்பட்டது, பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புக் வழங்கப்பட்டது, செய்தியாளர்களுக்கு பேண்ட், சர்ட் மற்றும் நவதானிய வகை மாவு பாக்கெட் வழங்கப்பட்டது. இவ்விழாவை சிறப்பாக நடத்திக் கொடுத்த விழா ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பதி, பாண்டித்துரை, மோகன வேலன், நந்தகுமார், ஜூபிடர் ரவி, முத்துராஜ், ஜெகதீஸ்வரி, சூர்யா மோகன், சரவணன், ரங்கநாதன், பெரியதுரை, செந்தில்குமார், மற்றும் மயிலேறி ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

 மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அருசுவை உணவு பரிமாறப்பட்டன, 2024 தினசரி காலண்டர், சிறிய டைரி வழங்கப்பட்டது நிர்வாகிகளுக்கு பெரிய டைரி வழங்கப்பட்டது இறுதியாக கலந்து கொண்ட அனைவருக்கும் நமது அனைத்து செய்தியாளருக்கும் இணை ஆசிரியர் திருப்பதி நன்றியுரை கூறினார்.