சிறப்பு மனுநீதி நாள் முகாம்!

சிறப்பு மனுநீதி நாள் முகாம்!

  த.நெல்சன்,

 வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், திப்பசமுத்திரம் மற்றும் கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

   இந்த முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்.இஆப., அவர்களும், அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நந்தகுமார் அவர்களும் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

  இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திரு.மு.பாபு, அணைக்கட்டு ஒன்றிய குழு தலைவர் திரு.பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் திரு.கிருஷ்ணமேனன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.கவிதா, தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் திரு.தனஞ்செயன், மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.சுமதி, அணைக்கட்டு வட்டாட்சியர் திருரமேஷ், கீழ்கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.நஸ்ரின் பானு, திப்பசமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.புஷ்பா கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.