பேக்கரியை லூட் செய்த அ.தி.மு.க.பிரமுகர்!
ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,
பேக்கரி மற்றும் மளிகை கடையை அதிமுக பிரமுகர் ஒருவர் லூட் செய்து ரவுடியிஸத்தில் ஈடுபட்டார்.
கோவை மாவட்டம், அன்னூர், வடவள்ளி ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருப்பவரின் பெயர் பாலசுப்பிரமணியம்.
இவர் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் சம்பவதன்று காலை பெரியபுத்தூரில் உள்ள ஆரோக்கியா பேக்ஸ் மளிகை கடைக்குள் அத்து மீறி நுழைந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியிருக்கிறார்.
நின்று ரகளை செய்த மேற்படி துணை தலைவர் பற்றி போலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் அவர் மீது 5-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.