நோயாளிகளுக்கு உணவு வகைகள் தரமாக இருக்க வேண்டும்! ஆட்சியர் அட்வைஸ்!

நோயாளிகளுக்கு உணவு வகைகள் தரமாக இருக்க வேண்டும்! ஆட்சியர் அட்வைஸ்!

கு.அசோக்,

வாலாஜா அரசு மருத்துவமனையை மாவட்ட ஆட்சியர் வளர்மதி ஆய்வு செய்தார்!

  இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர்  வளர்மதி  மருத்துவமனையில் உள்ள மருத்துவர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.

  இந்த ஆய்வின் பொழுது  பிரசவ வார்டு பெண் நோயாளிகளின் படுக்கை அறைகள் மருந்தகங்கள், இயற்கை வைத்தியசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை ஆட்சியர் வளர்மதி பார்வையிட்ட அவர் நோயாளிகளுக்கு  வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து வளர்மதி   மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

   இதனைத் தொடர்ந்து மருத்துவமனைகளில் வழங்கப்படக் கூடிய உணவு சமையல் அறையினை பார்வையிட்ட ஆட்சியர் அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் உணவு தயார் செய்வதற்கான பொருட்களை பார்வையிட்டு அவற்றின் தரங்களை குறித்தும் சுகாதாரமான முறையில் உணவுகளை தயார் செய்வது குறித்து மருத்துவமனை சமையல் பணியாளர்களிடம் விசாரணை செய்து கேள்வி எழுப்பினார்.

  பிறகு மருத்துவமனை நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய உணவு வகைகள் மிகவும் தரமாக இருக்க வேண்டும் எனவும் அதனை சுகாதார முறையில் சமைத்து வழங்க வேண்டும் என  அறிவுரையை வழங்கினார்.