தரமற்று போடப்பட்ட பேவர் பிளாக் சாலை! கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்!

தரமற்று போடப்பட்ட பேவர் பிளாக் சாலை! கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்ட மக்கள்!

ஜி.கே.சேகரன்,

 கையால் உடைக்கும் அளவிற்கு தரமற்று போடப்பட்ட பேவர் பிளாக் சாலை! சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அகற்றப்படாமல் போடப்பட்டதால் கலெக்டர் வாகனத்தை முற்றுகையிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்திய மக்கள்.

 திருப்பத்தூர் மாவட்டம்,  திருப்பத்தூர் அடுத்த ஆண்டியப்பனூர் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப. அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

 அப்போது ஆண்டியப்பனூர் பகுதி 8-வது வார்டு மேல் தெரு மற்றும் குறிஞ்சி வட்டத்தை சேர்ந்த பொது மக்கள் கலெக்டர் பஸ்கர பாண்டியன் வந்த வாகனத்தை நிறுத்தி சில குறைகளை சொன்னார்கள்.

 தங்கள் பகுதியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் சாலைகள் குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கே லாய்க்கற்ற நிலையில் இருந்தது.அங்கு சாலை அமைத்து தர வேண்டும் என கோரி பலமுறை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

  அதனடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தற்போது சுமார் 210 மீட்டருக்கு பேவர் பிளாக் சாலை அமைத்தனர்.

  ஆனால் பேவர் பிளாக் கல்  கையால் உடைத்தாலே சல்லி சல்லி ஆக உடையும் அளவிற்கு தரமற்றதாக உள்ளது. மேலும் சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பத்தை அகற்றாமலேயே சாலை போட்டுள்ளனர் என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

   அவற்றை உடனே விசாரிப்பதாக கலெக்டர் சொன்னதுடன், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.