சர்கரை நோயாளிக்கு வாகனம் வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி!

சர்கரை நோயாளிக்கு வாகனம் வழங்கிய அமைச்சர் ஆர்.காந்தி!

 கு.அசோக்,

 வாலாஜாவில் சர்க்கரை நோயால் இரண்டு கால்கள் அகற்றப்பட்ட நபருக்கு அமைச்சர் ஆர் காந்தி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மாற்றுத்திறனாளி வாகனத்தை வழங்கினார்.

   ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே உள்ள பஞ்சுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் கோபி (55) இவர் தனியாக கடையை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில் இரண்டு கால்களும் அகற்றப்பட்டது.

  இதனையடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி வாலாஜாபேட்டையில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சிக்கு வருகை தந்தார்.  அவரை சந்தித்த கோபி தனக்கு இரண்டு சக்கர வாகனம் வேண்டுமென்று கோரிக்கை விடுத்தார்,

 கோரிக்கையை ஏற்ற அமைச்சர் ரூபாய் ஒரு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலான மாற்றுத்திறனாளி பயணம் செய்யும் இரண்டு சக்கர வாகனத்தை வழங்கி உதவினார்.

   அதைத்தொடர்ந்து கோவிலில் கூடியிருந்த பொதுமக்கள் அனைவருக்கும் அமைச்சர் அன்னதானத்தை வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகர மன்ற தலைவர் ஹரிணி தில்லை, துணைத் தலைவர் கமல்ராகவன், நகர மன்ற உறுப்பினர்கள் இர்ஃபான், செங்கையபாபு, ரவிச்சந்திரன், பிருந்தா சிலம்பரசன்நகர கழக செயலாளர் தில்லை, ஒன்றிய பெருந்தலைவர் சேஷாவெங்கட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.