அ.தி.மு.க. குடுமிப்பிடி சண்டையை வேடிக்கை பார்க்கும் பாஜக!

அ.தி.மு.க. குடுமிப்பிடி சண்டையை வேடிக்கை பார்க்கும் பாஜக!

 ம.பா.கெஜராஜ்,

 ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். ஆகிய அ.தி.மு.க. தலைவர்களுக்கிடையேயான மோதனை அவர்களின் பிக்பாஸ் கட்சியான பா.ஜ.க. ஏன் சமாதானப்படுத்த முன்வரவில்லை என்று பலரும் தலையை பிய்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதில் பெரிய அரசியல் கணக்கு இருப்பதை இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. இது இப்படியும் இருக்கலாம் என்பதற்கான செய்தியாகும்.

   கடந்த ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் வானகரத்திலுள்ள ஸ்ரீவரி திருமணமண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடரப்பட்டதை அறிவோம்.

 சென்னை உயர் நீதிமன்றம் தொடரப்பட்ட அந்த வழக்கில், மேற்படி பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது.

   இத்தீர்ப்பை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கொண்டாடிவரும் நிலையில், அதிமுக கட்சி நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் வரும் என அக்கட்சி தொண்டர்கள் நம்புகிறார்கள்.

  அக்கட்சியின் தொண்டர்கள் எப்படி நம்புகிறார்கள் என்பது ஒரு பக்கம் இருக்க,  திமுக, பாஜக ஆகிய இரு கட்சிகளில் இது யாருக்கு சாதக, பாதகம் என்று பட்டிமன்றம் நடந்துக் கொண்டிருக்கிறது

   ஏன்னா தமிழக சட்டசபையில் நாங்கள் தான் எதிர்கட்சி என்று பாஜக அவ்வப்பொழுது சொல்லிக் கொள்கிறது.

ஆளும் திமுக அரசின் தவறுகளை தீவிரமாக சுட்டிக்காட்டுபவர்கள் என்ற முறையில் பாஜகதான் தமிழகத்தின் உண்மையான எதிர்க்கட்சி என்று பாஜக மறைமுகமாக சொல்லி வருவதன் நோக்கமே, எம்எல்ஏக்கள் எண்ணிக்கையின்படி சட்டமன்றத்தில் இரண்டாம் இடத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவை, மக்கள் மன்றத்தில் பின்னுக்கு தள்ளும் நுட்பமான முயற்சிதான் அது.

 குறிப்பாக அதிமுக ஒரே அணியாக இருந்தால், தேர்தலுக்கு அதைச் சார்ந்தே பா.ஜ.க இருக்க வேண்டி கட்டாயம் ஏற்படும். ஆனால் அதிமுகவுக்குள் ரெண்டுபட்டால் அதில் ஒரு அணியை தமது தலைமையிலான கூட்டணியில் சேர்த்துக் கொள்ளலாம் என்பது பா.ஜ.க.வின் கணிப்பு.

 எப்படி பார்த்தாலும் அதிமுக அதிருப்தி வாக்குகள் எப்படியும் திமுகவுக்கு போகாது. இந்த கணக்கில் தான் அதிமுக பிரச்சனையை சமாதானப்படுத்தும் முயறசியில் பாஜக இறங்கவில்லையாம்.

ஓகே....ஓகே.