கொஞ்ச நிலத்துக்காவது கரண்டு கொடுங்க அய்யா?

ஜி.கே.சேகரன்,
சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்ட பணிக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தி அதற்கு உண்டான இழப்பீட்டை தந்த நிலையில், மீதமுள்ள விவசாய நிலத்திற்கு பயன்படுத்தி வந்த மின் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநிலத் இளைஞரணி தலைவர் சுபாஷ் மனு அளித்தார்.
இராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை பெங்களூர் விரைவு சாலை திட்டம் பணிக்காக விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கான இழப்பிட்டும் வழங்கப்பட்டுள்ள நிலையில், விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்பட்டு வந்த மின் இணைப்பை மிதமிள்ள நிலத்திறக்கு அல்லது அந்த விவசாயின் வேறு இடத்தில் உள்ள விவசாயி நிலத்திற்கு விவசாய மின் இணைப்பை மாற்றி தர வேண்டும் என கோரி விவசாயிகள் சார்பில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில இளைஞர் அணி தலைவர் சுபாஷ் சோளிங்கர் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
இந்த மின் இணைப்பு பெற விவசாயிகளை அலைக்கழிக்காமல் உடனடியாக மின் இணைப்பை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அதற்கு அதிகாரிகள் சார் பார்க்கலாம் என்று பதிலளித்துள்ளார்.