ஓட்டமாய் ஓடிய 800 பேர்!

கு.அசோக்,
இளைஞர் தினத்தை முன்னிட்டும் எய்ட்ஸ் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாராத்தான் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்று ஓடினார்கள்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு துறை சார்பில் சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டும் எய்ட்ஸ் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் நெடுந்தொலைவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பென்கள் என இரு பிரிவு போட்டிகள் நடந்த இதில், 800- க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று ஆட்சியர் அலுவலகம் முதல் நேதாஜி விளையாட்டு அரங்கம் வரை மீன் மார்கெட், கோட்டை சுற்றுசாலையில் சென்று ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடினார்கள்.
இந்த போட்டியை வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப.அவர்கள் துவங்கி வைத்தார் இறுதியாக இந்த மாராத்தான் போட்டி நேதாஜி விளையாட்டரங்கை வந்ததடைந்தது, பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.