மோர்தானா டேம் கால்வாய் சேதம்- மர்ம நபர்கள் குறித்து ஆட்சியர் அதிரடி உத்தரவு!

மோர்தானா டேம் கால்வாய் சேதம்- மர்ம நபர்கள் குறித்து ஆட்சியர் அதிரடி உத்தரவு!

B.Ramesh ananda raj,

 வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல்மாயில் கிராமத்தில் செல்லும் மோர்தானா இடதுபுற கால்வாயில் இரண்டு இடங்களில் கால்வாயை சேதப்படுத்தி தண்ணீர் வெளியேற்றிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன்,இ.ஆ.ப.,அவர்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  இன்று (17.10.2021) வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் வட்டம் மேல்மாயில் கிராமத்தில் செல்லும் மோர்தானா அணையிலிருந்து வரும் தண்ணீர் கடைமடை வரை சென்றடைகிறது.

 இந்த மோர்தானா இடதுபுற கால்வாயின் இரண்டு இடங்களில் சில சமூக விரோதிகள் சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றியுள்ளனர்.

  இதன் காரணமாக மோர்தானா அணை தண்ணீரை கடைமடைக்கு எடுத்துச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து புகார்கள் எழுந்த நிலையில்ஸ்,  இதனை நேரடியாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மோர்தானா அணையிலிருந்து தண்ணீரை எடுத்து செல்ல தடை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

  அரசு சொத்தை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பணித்தார்.

  இந்த ஆய்வின் போது கே.வி.குப்பம் வட்டாட்சியர் திருமதி.சரண்யா,காவல் ஆய்வாளர் திருமதி.செந்தில்குமாரி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தி வெளியீடு,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,வேலூர்.