செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கண்காட்சி நிறைவு! 20,000/பேர் பங்கேற்பு!

க.பாலகுரு

 திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின்  சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சி நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம்  திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

  திருவாரூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு அரசின் “ஓயா உழைப்பின் ஓராண்டு, கடைக்கோடி தமிழரின் கனவுகளைத் தாங்கி” அரசின் சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சி திருவாரூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வன்மீகபுரத்தில், மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் தலைமையில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் 21.01.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டு தொடர்ந்து 10 நாட்கள் அரசின் சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சி மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் நடைபெற்றது.

   இக்கண்காட்சி தற்போது முடிவுற்றது. 

  மேற்படி அரசின் சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சியில் அனைத்து துறைகளின் காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு மக்களுக்கு நலத்திட்டங்கள் குறித்தும், துறைகளின் மூலம் வழங்கப்படும் அலுவல் ரீதியான பணிகள் குறித்தும் அமைக்கப்பட்டிருந்தது.

  இக்கண்காட்சியல் தினந்தோறும் கலை நிகழ்ச்சிகள், உணவுத்திருவிழாக்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

   இந்த அரசின் சாதனை விளக்கப்புகைப்பட கண்காட்சியில் தினந்தோறும்; 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளவும், அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான வழிமுறைகள் அறிந்து கொள்ள இப்புகைப்பட கண்காட்சி பயனுள்ளதாக அமைந்தது.

இந்நிகழ்வில், திருவாரூர் நகர்மன்ற துணைத்தலைவர் அகிலா சந்திரசேகர், நகர்மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.