மகளிர்க்கு மாதம் 2,500 ! கேஸ் சிலிண்ட 400! தெலுங்கானா தேர்தலுக்கு சோனியா - கேசிஆர் வாக்குறுதி!

வி.டி.வித்யாசாகர்,
தெலங்கானாவில் தற்போது கே.சந்திரசேகர ராவின் தலைமையிலான பிஆர்எஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலங்கானா சட்டமன்றத்திற்கு வரும் 30 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது கடந்த இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய கேசிஆர் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் அடிக்க தீவிரமாக உள்ளார். ஆனால் அதை முறியடிக்கும் விதமாக காங்கிரஸ் அங்கு மெகா அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 2,500 உதவித் தொகை: சோனியா காந்தி அறிவிப்பு..!
குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் எம்பி சோனியா காந்தி, தெலுங்கானாவில் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா தேர்தல் பிரசாரத்தின் போது காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இதோ:
- குடும்பத் தலைவிகளுக்கு மகாலட்சுமி திட்டத்தின் கீழ் மாதம் ரூ. 2,500 உதவித் தொகை வழங்கப்படும்
- சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ. 500க்கு வழங்கப்படும்.
- அரசு பேருந்தில் பெண்கள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்தை செயல்படுத்துவோம்.
- தெலுங்கானா தனி மாநில அமைக்க போராடியவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்கப்படும்.
- வீடுகட்ட ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
- வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
- விவசாயிகள், குத்தகை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ15,000 வழங்கப்படும்.
- விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ12,000 நிதி உதவி வழங்கப்படும்.
இந்நிலையில் பி.ஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 400 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தகுதியுடைய அனைத்து வாக்காளர்களுக்கும் 15 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தலித் பந்து மற்றும் கே.சி.ஆர் பீமா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நலத்திட்டங்கள் தொடரும் என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலித் பந்துவின் கீழ், தெலங்கானாவில் உள்ள ஒவ்வொரு தலித் குடும்பங்களும் தொழில் தொடங்க அல்லது விவசாயத்தில் முதலீடு செய்ய 10 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.சி.ஆர் பீமா திட்டத்தின் மூலம் மாநிலத்தில் வறுமை கோட்டின் கீழ் உள்ள 93 லட்சம் குடும்பங்களுக்கு 5 ரூபாய் லட்சம் காப்பீடு வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூத்த குடிமக்கள், கணவரை இழந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக ஓய்வூதியம் அடுத்த சில ஆண்டுகளில் கட்டம் கட்டமாக மாதம் ரூ.2,016ல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கான சமூக பாதுகாப்பு ஓய்வூதியம் மாதம் 6,000 ரூபாயாக ஆக உயர்த்தப்படும் என்றும் தகுதியுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 400 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றும் தகுதியுடைய அனைத்து வாக்காளர்களுக்கும் 15 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.