இந்த வயசுல ...விருது வேண்டாம் போங்கப்பா! மேற்கு வங்க பிரபலங்களின் ஜர்க்!!

இந்த வயசுல ...விருது வேண்டாம் போங்கப்பா! மேற்கு வங்க பிரபலங்களின் ஜர்க்!!

.முகமது இர்பான்,

   மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா பத்ம விருதுகளை ஏற்கப்போவதில்லை என ஏற்கனவே கூறியிருந்தார்.  

 அந்த வரிசையில்  பத்ம விருதை பெற சந்தியா முகர்ஜி மறுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

 பாரத திரு நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.

  இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

 அப்படியிருக்க தனக்கு பத்மஸ்ரீ விருது வேண்டாம் என சந்தியா முகர்ஜி நிராகரித்தார்.

 90 வயதில் விருது வழங்குவது தன்னை அவமதிப்பது போல இருப்பதாக சந்தியா முகர்ஜி கூறினார். பத்ம விருதுகள் போன்றவை இளம் வயதில் உள்ள கலைஞர்களுக்கு கிடைக்க வேண்டியது. அதனால் இந்த விருதுகளை நிராகரிப்பதாகவும், விருதை நிராகரிப்பதில் எந்தவித அரசியல் எண்ணமும் இல்லை. காலம் கடந்து சாதனை படைத்த கலைஞர்களை கௌரவிப்பதை எதிர்க்கவே இந்த விருதை பெற மறுக்கிறார் என அவரது மகள் சவுமி சென் குப்தா சொன்னார்.

  ஏற்கனவே பத்ம விருதுகளை ஏற்கப்போவதில்லை என மேற்கு வங்காள முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறி, எனக்கு முன்கூட்டியே இது பற்றி சொல்லவில்லை என்கிற காரணத்தையும் சுட்டிக்காட்டினார்.

   தற்போது அதே மாநிலத்தை சேர்ந்த மற்றொரு பிரபலமும் பத்ம விருதை ஏற்க மறுத்துள்ளது மேற்கு வங்கத்தின் மீது மத்திய அரசின் பார்வை பலமாக படர்ந்துள்ளது.