நித்தியானந்தா சிலைக்கு கைலாசாவில் பூஜை! உள்ளாரா?இல்லையா? பக்தர்கள் பதற்றம்!!

 

ம.பா.கெஜராஜ்,

   திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட நித்யானந்தா  ஜீவசமாதி அடைந்துவிட்டதாக ஊடக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நித்தி இருக்காரா?இலையா? என குழப்பமான சூழல் இருக்கும் நிலையில், கைலாசாவில் அவரது சிலைக்கு பூஜை செய்யப்பட்டதால் பக்தர்கள் பதற்றம் அடைந்துள்ளார்கள்.

 இதற்கு நித்தியின் தரப்பிலிருந்து சில தகவல் தகவல் வெளியாககியிருப்பினும், அதில் நம்பகத்தன்மை இல்லை.

இது பற்றின விவரம் வருமாறு,

 உலகமெங்கும் உள்ள அவரது ஆதரவாளர்கள் நித்தியின் உரையை கேட்க்க இரவு பகல் பாராமல் காத்துக் கிடக்கிறார்கள்.

 இந்நிலையில் கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நித்யானந்தாவை போன்ற தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இத்தனைக்கும் கடந்த மாதம் அவர் தனது அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ஆழ்ந்த சமாதி நிலையில் இருந்து விரைவில் உடலில் குடியேறி சத்சங்க உரையாற்றுவேன் என சொல்லி இருந்தார். இதற்கு மாறாக அவரது உருவ சிலைக்கு பூஜை என்றதும் பகக்த கோடிகள் பதற்றத்தில் உள்ளனர்.

 ஆக, கைலாசாவில் நடந்த இந்த பூஜைகள் பக்தர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

 நித்யானந்தாவின் தோற்றத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தும் புகைப்படங்கள் பதிவிடப்பட்டிருப்பது அவர் ஜீவசமாதி ஆகி விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

  ஆனால் இந்த தகவல்களை அவரது தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக நித்யானந்தா தரப்பினர் வெளியிட்டுள்ள பதிவில் கைலாசாவில் உள்ள நித்யனந்தேஸ்வர கோவிலில் இந்த வழிபாடு நடத்தப்பட்டுள்ளது என்றும்,  சித்திரை நட்சத்திர உற்சவம் என்பதால் இந்த பூஜை நடத்தப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டிருக்கிறது.

     சித்ரா நட்சத்திரம் என்பது பூமியில் ஸ்ரீபரம்ம சமாரின் செயல்பாடுகளை கொண்டாடும் வகையில் நடத்தப்படும் பூஜை. இது இந்து மதத்தின் உச்ச கடவுளின் நட்சத்திரம் ஆகும். அவர் தான் எல்லோருக்கும் கடவுள் என்பதால் அவரை வணங்க வேண்டும். அதன்படியே கைலாசாவில் அவரின் சிலைக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறு பூஜை செய்யப்பட்டது. அவருக்கு இந்த நல்ல நாளில் எங்களின் மரியாதை வழங்கப்பட்டது என பதிவிட்டுள்ளனர்.

  இவ்ளோ சம்பிரதாயங்களை நீட்டி முழக்கும் கைலாசா பீடத்து தரப்பினர், நித்தியின் உடல் நலம் குறித்தோ, அவர் உள்ளாரா? இல்லையா என்பது பற்றியோ வாயைத் திறக்கவில்லை.