28 ஆம் தேதி திமுக மா.செ.கூட்டம்!அமைச்சர்களுக்கு கிலி!

ம.பா.கெஜராஜ்,

  வரும் 28 ஆம் தேதி திமுக மாவட்ட செயலாளர்களுக்கான கூட்டம் கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது

 இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டிருக்கிறார்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம், 28.05.2022 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும்.

   இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ள அவர்,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும்  குறிப்பிட்டிருக்கிறார்.

 இது குறித்து திமுக வட்டாரத்தில் விசாரித்த போது, கடந்த இரண்டு தினங்களாக அமைச்சர்கள் சில மாற்றப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கிறது.

  குறிப்பாக உதயநிதி உள்ளிட்ட நான்கு புது முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது.

 அதே போல் சில அமைச்சர்கள் மீது அதிருப்தி எழுந்துள்ளதையும் மறுக்க இயலாது.

இவற்றை மையப்படுத்தி, 28 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மா.செ.கூட்டத்தில் விவாதிக்கப்படுமாம்.

 முக்கியமாக அதிருப்தி அமைச்சர்களை நேரடியாகவே விசாரிக்கபடுவார்கள், மேலும் புது அமைச்சர்கள் குறித்து கருத்தும் கேட்க்கப்படும் என்கிறார்கள்.