அதிகாரிகளை ரவுண்டு கட்டி விரட்டிய கிராமமக்கள்!

அதிகாரிகளை ரவுண்டு கட்டி விரட்டிய கிராமமக்கள்!

 கு.அசோக்,

காட்பாடி அருகே உள்ள அசரீர் மலை முருகர் கோவிலை இந்து சமய அறநிலைத்துறை எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு காட்டி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, ஆகவே அதிகாரிகள் திரும்பி சென்றனர்.

 வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த 66 புத்தூர் கிராமத்தில் அசரீர் மலையில் ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி முருகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஊர் பொதுமக்கள் நிர்வகித்து வந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. «

 கோவிலுக்கு அறங்காவலர் குழு தலைவராக ராஜம்மாள், அறங்காவலர்களாக மணி, முருகன் ஆகியோர் நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில் கடந்த வாரம்   காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது.அதில் இரு தரப்பினரும் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை.

  அதனால் இரண்டாவது கட்டமாக காட்பாடி தாலுகா அலுவலகத்தில் அமைதி கூட்டம் நடந்தது. இதற்கு 66 புத்தூர் கிராமத்தில் இருந்து பொதுமக்கள் திரண்டு கோவிலை இந்து சமய அறநிலையத்துறை கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

  இருப்பினும் மாலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் காட்பாடி வட்டாச்சியர் மற்றும் காவல்துறையினர் கோவிலை கையகப்படுத்த சென்றனர்.

  ஆனால் கோவிலை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து 500 க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு கோவிலை கையகபடுத்த எதிர்ப்பு தெரிவித்ததால் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

ஆக அந்த பகுதியில் தொடர் பிரச்சனை ஏற்படும் என தெரியவருகிறது.