ஏ.சி.எஸ்-ஸிடன் மோத… கதிர் ஆனந்த் தான் சரியான வேட்பாளர்!

ஏ.சி.எஸ்-ஸிடன் மோத… கதிர் ஆனந்த் தான் சரியான வேட்பாளர்!

 உ.சசிக்குமார்,

 நாடாளுமன்ற தேர்தல் வரவிருக்கும் நிலையில் திமுக கூட்டணியில் ஏற்கெனவே இருக்கும் காங்கிரஸ், விசிக.கம்யூக்கள் போன்ற அணிகள் தொடரும். ஆனால் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு பதிலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் இதில் இடம் பெற வாய்ப்புகள் உள்ளன. தொகுதி பங்கீட்டில் பழைபணியையே கடைபிடிக்கலாம் என்கிற நிலையில், சொந்தமாக யாருக்கெல்லாம் சீட்டு கொடுக்கலாம் என்று திமுக சில ஆலோசனைகளை வைத்திருக்கிறதாம்.

  அதில் கடந்த முறை போட்டியிட்டவர்களுக்கு சில சீனியர்களைத் தவிர்த்து வேட்பாளர் மாற்றம் கட்டாயம் இருக்கும் என்கிறார்கள்.  எனவே புதியவர்கள், தொகுதியில் செல்வாக்கு உள்ளவர்களுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம், அந்த வகையில் வேலூர் தொகுதியில் வேட்பாளர் மாற்றப்பட உள்ளதாக உறுதிபடுத்தப்படாத செய்திகள் வெளியாகியுள்ளன.

   வேலூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பவர் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த். இவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட விரும்புவார். அதே நேரத்தில் ஏற்கனவே இந்த தொகுதியில் இருமுறை போட்டியிட்டு தோற்றுப்போன ஏ.சி.சண்முகம் போட்டியிடுவது உறுதி. அதை சென்ற மாதம் அமித்ஷா வேலூர் வந்த போது உறுதிபடுத்த முடிந்தது.

  இவர் வெறும் 8141 ஓட்டு வித்தியாசத்தில் தான் ஏ.சி.எஸ். தோல்வியை தழுவினார். கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகளைப் பெற்ற நிலையில் ஏ.சி. சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்றார்.  வாணியம்பாடி (இஸ்லாமியர்) வாக்குகள் தான் அவரை பின்னுக்கு தள்ளியது.

 ஆக ஏ.சி.சண்முகம் கூட பலமான வேட்பாளர் தான், அப்படியானால் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்து தான் அவரை எதிர்க்க சரியா தேர்வாக அமைவார் என்பது நடைமுறை.

  அதற்காக கதிர் ஜோலார் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட செயலாளரான க.தேவராஜிடம் கடைபிடித்த மோதல் போக்கை சரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றி பெற்ற பின்னர் கதிர் ஆனந்த் ஆக்டிவாக செயல்படவில்லை என்ற பேச்சும் உள்ளது. அதே போல கதிர் ஆனந்த் மீது இஸ்லாமியர்கள் ஒருவருத்தத்தை வைத்திருக்கிறார்கள், அதை அவர் உடனடியாக போக்கும் வன்ணம் வாணியம்பாடி ஆம்பூர் பகுதிகளுக்கு வாரம் ஒரு தடவையாவது சென்று அவர்களை சந்தித்து வருவது நலம் என்கிறார்கள்.

  என்ன இருந்தாலும், வேலூர் நாடாளுமன்ற தேர்தலில், வேலூர் தொகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் என்பதாலும், பா.ஜ.க.வேட்பாளரான ஏ.சி.எஸ். ஒரு சிலரின் வழிகாட்டுதல்களோடு எல்லையை முடக்கிக்கொள்வதாலும், தமக்காக வாக்குகளை பெறுவதில் ஸ்லோமோஷன் காணப்படுகிறது. அவற்றை சரி செய்து எல்லையை விரித்தால் ஹாட்ரிக் தோல்வி என்கிற பேச்சை தவிர்த்து, நீண்ட இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்றத்தில் கால்பதிக்கலாம் என்கிறார்கள் வாக்காளர்கள்.

 ஆனாலும் துரைமுருகனின் நட்பு வட்டம், கட்சியின் பலம், இஸ்லாமியர்களின் பா.ஜ.க.எதிர்பான நிலை ஆகியவை கதிரை விளைய செய்யும். 

முக்கிய குறிப்பு:- ஏ.சி.சண்முகம் அவர்கள் அவருடைய சொந்த ஊரான ஆரணி நாடாளுமன்ற தொகுதியிலும், கதிர் ஆனந்த் அவர்கள் எம் பி க்கு பதிலாக கே வி குப்பம் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிட போவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு வசதியாக கேவி குப்பம் தனித் தொகுதி என்கின்ற அந்தஸ்தை கூடிய விரைவில் இழக்கும் என்று தெரிகிறது.

அப்படி என்றால் வேலூருக்கு முன்னாள் எம்பி காதர் மொகிதீன் திமுக கூட்டணியிலும், முன்னாள் மேயர் கார்த்தியாயினி  அதிமுக கூட்டணியிலும் போட்டியிட உள்ளனராம்.