ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்த வேலூர் கலெக்டர்!

ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்த வேலூர் கலெக்டர்!

கு.அசோக்,

வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்  மாவட்ட ஆட்சியர் ஆய்வு தனியார் பேருந்துகளின் ஏர் ஹாரன்கள் குறித்து திடீர் ஆய்வு நடத்தினார்.

   வேலூர்மாவட்டம்,வேலூரில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்துகளை அதிக வேகமாக இயக்க வேண்டும் என்ற நோக்கில் மக்களின் செவித்திறனை பாதிக்கும் வகையிலும் ஒலி மாசை ஏற்படுத்தும் வகையில் ஏர் ஹாரன் களை பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

  இது போக்குவரத்து சட்டத்திற்கு புறம்பானது என பல புகார்கள் வந்ததை அடுத்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், இ.ஆ.ப. அவர்கள் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் சென்று பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்தார்.

  அப்போது அதிக ஒலி எழுப்பும் வகையில் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த   ஏர் ஹாரன்களை அகற்றியதுடன், அவற்றை பறிமுதல் செய்து  இனி வரும் காலங்களில் இதனை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைவிடுத்தார்.