இந்திய துணை தேர்தல் ஆணையர் ஹிரிதேஷ் குமார் ஆய்வு கூட்டம்!

இந்திய துணை தேர்தல் ஆணையர் ஹிரிதேஷ் குமார் ஆய்வு கூட்டம்!

G.K.Sekaran,

வேலூரில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஹிரிதேஷ் குமார் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

     வேலூர்மாவட்டம்,வேலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஐந்தாவது தளத்தில் உள்ள கூட்டரங்கில் இந்திய துணை தேர்தல் ஆணையர் ஹிரிதேஷ் குமார் தலைமையில் வாக்காளர்கள் பதிவு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி மாவட்டத்தேர்தல் பிரிவு சரவணன் மற்றும் வட்டாட்ச்சியர்கள் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர் இதில் வாக்காளர்கள் பதிவு பெயர் சேர்த்தல் நீக்குதல் ஆகியவைகள் உண்மையாக நடைபெற வேண்டும் வாக்குசாவடிகள் அமைவிடங்களில் மாற்றங்கள் செய்ய வேண்டுமா 18 வயது நிரம்பிய இளைஞர்களை வாக்காளர்களாக பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுதல் வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை போக்க வேண்டும் போன்ற பல்வேறு ஆலோசனைகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது  அத்துடன் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்தல் போன்றவைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.