கூடுதல் தலைமைச் செயலாளருடன் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு!

கூடுதல் தலைமைச் செயலாளருடன் திருப்பத்தூர் ஆட்சியர் ஆய்வு!

ஆர்.ரமேஷ்,

 திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஊராட்சி ஒன்றியம் இராச்சமங்கலம் ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் என்னை வித்துக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் 2.50 ஏக்கர் பரப்பளவில் நிலக்கடலை செயல் விளக்க திடலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.இ.வளர்மதி, வருவாய் கோட்டாட்சிபர் திருமதி.இ சுமி, வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.பாலா, துணை இயக்குனர் திரு.பச்சையப்பன், உதவி இயக்குனர் திருமதி.இராகினி, வட்டாட்சியர் சிவப்பிரகாசம் ஆகியோர் இருந்தனர்.

   மேலும், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

   தொடர்ச்சியாக கந்திலி ஊராட்சி ஒன்றியம் மட்றப்பள்ளி ஊராட்சியில் ரூ.14.37 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

  மேலும், புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 பயனாளிகளுக்கு குழைந்தை நல பரிசு பெட்டகங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

  மேலும், புதூர்நாடு அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் ரூ.28.84 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரத்தியேக பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு பிரிவு கட்டடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் திட்ட இயக்குனர் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்டம் திரு.தென்காசி.எஸ்.ஜவஹர்.இ.ஆ.ப., அவர்கள் பாப்டையிட்டு ஆய்வு செய்தார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன்,இ.ஆ.ப., வருவாய் கோட்டாட்சியர் திருமதி. லட் சுமி, இனை இயக்குனர் சுகாதாரப் பணிகள் மரு.செந்தில், வட்டாட்சியர் திரு.சிவப்பிரகாசம், அரசு மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

  அடுத்ததாக மட்றப்பள்ளி முதல் புதூர்நாடு சாலை வரையில் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.18 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 13 கி.மீட்டர் தொலைவிற்கு மலைப்பாதை புதுப்பிக்கும் பணிகளும் நேரடியாக ஆய்வு செய்யப்பட்டது.