காதலன் நிர்வாணம் தர்மடி! காதலி கூட்டு பலாத்காரம்!! இருவர் கைது!!

ஜார்ஜ்.ரவி,
காதலனை நிர்வாணப்படுத்தி, அவருக்கு தர்மடி கொடுத்து கைகால்களை கட்டிப்போட்ட இருவர், அவருடன் வந்த காதலியை கூட்டு பலாத்காரம் செய்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை செய்த இருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இது குறித்து போலிஸ்தரப்பில் கூறப்படுவதாவது,
மகாராஷ்டிர மாநில பால்கர் மாவட்டம் விரார் பகுதியில் ஜிவ்தானி கோவில் உள்ளது. இந்த கோவில் அருகில் உள்ள மலையில் சம்பவத்தன்று மாலை வேளையில் வாலிபர் ஒருவர், இளம்பெண்ணுடன் பேசிக்கொண்டு இருந்தார். 20 வயதுடைய அவர்கள் காதலித்து வந்ததாக தெரிகிறது. காதல் ஜோடி தனியாக பேசிக்கொண்டு இருந்ததை அங்கு மதுகுடிக்க வந்த விரார் கிழக்கு சாய்நாத் பகுதியை சேர்ந்த தீரஜ் சோனி (வயது 25), லட்சுமண் ஷிண்டே(22) கவனித்தனர். அவர்கள் தனிமையில் இருந்த ஜோடியை செல்போனில் வீடியோ எடுத்தனர்.
அதனைப்பார்த்த காதல் ஜோடிகள் விடியோ எடுக்க வேண்டாம் என்று கெஞ்சிக்கொண்டே அங்கிருந்து ஓட முயன்றனர்.
ஆனால் மேற்படி நபர்கள் வீடியோவை வாட்ஸாப்பில் பரவவிடுவோம் என மிரட்டி வாலிபரிடம் மிரட்டி பணம் கேட்டனர்.
அவரிடம் பணம் இல்லாததால் கூகுள் பே மூலம் ரூ.500 அனுப்புமாறு போனில் தொடர்பு கொண்டு நண்பரிடம் கேட்டு உள்ளார்.
அந்த நேரத்தில் தீரஜ் சோனியும், லட்சுமண் ஷிண்டேவும் இளம்பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். உடனே காதனல், தன் காதலியை காப்பாற்றும் நோக்கத்தில் அங்கிருந்த பீர் பாட்டிலை எடுத்து தீரஜ் சோனி மண்டையை உடைத்தார்.
ஆத்திரமடைந்த 2 பேரும் காதலனின் உடைகளை அவிழ்த்து தாக்கி, கீழே தள்ளி கைகளை கட்டி போட்டனர். பின்னர் அவர்கள் இளம்பெண்ணை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்று கூட்டு பலாத்காரம் செய்து விட்டு தப்பினர்.
இந்நிலையில் வாலிபர் ஆடையில்லாமல் உள்ள தகவல் அறிந்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போலீசாரிடம் வாலிபர் நடந்த சம்பவத்தை கூறி அழுதார்.
உஷாரான போலீசார் அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளை தொடர்பு கொண்டு தலையில் காயத்துடன் யாரும் சிகிச்சை பெற வந்தால் தகவல் கொடுக்குமாறு தெரிவித்தன் பேரில், தலையில் காயத்துடன் வாலிபர் ஒருவர் சிகிச்சைக்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
ஆஸ்பத்திரி டாக்டர் காயத்துடன் வந்த வாலிபரின் படத்தையும் போலீசாருக்கு அனுப்பினார். அப்போது அவர் காதலனை தாக்கி, இளம்பெண்ணை கற்பழித்த தீரஜ் சோனி என்பது தெரியவந்தது.
உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீரஜ் சோனியை கைது செய்தனர். மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் லட்சுமண் ஷிண்டேயையும் கைது செய்தனர்.
சம்பவம் நடந்த 2 மணி நேரத்தில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்தார்கள்.