ரவுடி வண்டு ராஜேஷ் கொலையானதை தொடர்ந்து பாணாவரம் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீர் ஆய்வு!

ரவுடி வண்டு ராஜேஷ் கொலையானதை தொடர்ந்து பாணாவரம் காவல் நிலையத்தில் டி.ஐ.ஜி. எம்.எஸ்.முத்துசாமி திடீர் ஆய்வு!

கு.அசோக்,

  ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம்  காவல் நிலையத்தில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ். முத்துசாமி, இ.கா.ப, அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாணாவரம் பகுதியில் அமைந்துள்ள சோளிங்கார் ரயில் நிலைய நடைமேடை அருகே தண்டவாளத்தில் கடந்த ஜீலை 6-ம் தேதிஅன்று பல்வேறு குற்றவழக்கில் தொடர்புடைய வண்டு என்கிற ராஜேஷ்(30) தலை பின்பக்க கழுத்து மற்றும் கைகளில் வெட்டப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

   இது குறித்து காட்பாடி ரயில்வே காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வந்த நிலையில், வண்டு என்கிற ரஜேஷை  கொலை செய்த வழக்கில் காவல்துறையினர் துரிதமாக செயல்ப்பட்டு 6-பேரை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

   இதனால் பாணாவரம் பகுதியில் தொடாந்து பதட்டம் நிலவியது. இந்நிலையில் வேலூர் சரக காவல்துறை துணை தலைவர் எம்.எஸ்.முத்துசாமி பாணாவரம் காவல்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

*அப்போது செய்தியாளர்கள்  பாணாவரம் பகுதியில் நடைப்பெற்ற கொலை சம்பவத்தால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாகவும், பொதுமக்களின் அச்சத்தை போக்கிட காவல்துறையின் நடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.

 அதற்கு பதிலளித்த அவர்  இரவு நேரங்களில் கூடுதலான காவலர்களை நியமித்து கூடுதலான ரோந்து பணியை அதிகபடுத்தியுள்ளோம் என்றார்.

*கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்ப்பட்ட தகராறில் பாணாவரம் பகுதியில்  இதுவரை மூன்று கொலை சம்பவங்கள் அரங்கேரியுள்ளதாக அதை தடுப்பதற்கான நடவடிக்கை என்ன என்ற கேள்விக்கு.

தொடர்ந்து கஞ்சா விற்பனையை தடுக்க தொடர் நடவடிக்கையாக குற்றவாளிகள் கைது  செய்துள்ளதாகவும், கடந்த மாதம் மட்டுமே கஞ்சா கடத்தல் சம்மந்தமாக  5 குண்டாஸ் வழக்குகள் பதிய பட்டுள்ளதாக தெரிவித்தார்.

*மேலும் ரயில் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக எழுப்பட்ட  கேள்விக்கு,

தொடர்ந்து கண்கானிக்க படுவதாகவும்  விரைவில் முற்றிலும் தடுக்க நடவடிக்கையை தீவிரபடுத்த உள்ளதாகவும் சொன்னார்.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி.கிரன்ஸ்ருதி,இ.கா.ப. அரக்கோணம் உட்கோட்ட  ஏடிஎஸ்பி யாதவ்கிரீஷ் அசோக்  ஆகியேர் உடனிருந்தனர்.

  முடிவில் வேலூர் சரக காவல்துறை துணைதலைவர்  முத்துசாமி, காவல் கண்காணிப்பாளர் கிரன்ஸ்ருதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் யாதவ்கிரீஷ்அசோக் ஆகிய மூவரும் இணைந்து காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர்.