தமிழக அரசுக்கு ஆபத்து இல்லை:- துரைமுருகன், திருமாவளவன், அழகிரி, வேல்முருகன் உள்ளிட்டோரின் பேட்டிகள் உள்ளது! ஸ்க்ரோல் செய்து வாசிக்கவும்!

ஜி.கே.சேகரன்,
மகளிர் உரிமைதொகை எதிர்க்கட்சிகள் யாருக்கு வழங்கவேண்டுமென எழுதிகொடுத்தால் வழங்குகிறோம்:-துரைமுருகன்!
மகளிர் உரிமைதொகை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு உண்மையல்ல யாருக்கு வழங்கவேண்டுமென எழுதிகொடுத்தால் வழங்குகிறோம், கர்நாடக அரசு மேகதாதுவின் குறுக்கே அனைக்கட்டுவோம் என கூறுவது அரசியலுக்காக தான் தமிழகம் அதனை ஒரு போதும் அனுமதிக்காது தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கழிஞ்சூரில் பேட்டி
வேலூர்மாவட்டம், வேலூர், கழிஞ்சூர், ஏரியில் சுமார் ரூ.29 கோடி செலவில் படகு குழாம் உடன் பொழுது போக்கு மையமாக மாற்றும் பணிகளை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் காட்பாடி கட்டப்பட்டுள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள செயல்படாமல் மூடிக்கிடக்கும் நீச்சல் குளத்தையும் திடீரென ஆய்வு செய்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் மேயர் சுஜாதா துணை மேயர் சுனில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில் மேகதாது அனைகட்டுவோம் என கர்நாடக அரசு கூறுவது அவர்களின் அரசியலுக்காக தான் பேசுகிறார் ,அவர்களால் மேகதாது அணையை கட்ட முடியாது காரணம் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
சுற்றுச் சூழல்துறை, வனத்துறை, காவிரி நதி நீர் ஆணையம் எல்லாவற்றைவிட தமிழக அரசிடம் ஒப்புதலை பெறவேண்டும் அவ்வளவு சீக்கிரம் அனையை கட்ட முடியாது நாங்களும் அணையை கட்ட விடமாட்டோம் ஒப்புதலும் தரமாட்டோம்.
நீதிமன்றம் செல்வோம், ஒரு போதும் கர்நாடக அரசு மேகதாது அணைகட்ட தமிழக அரசு அனுமதிக்காது. நாங்கள் ஒப்புகொள்ளவே மாட்டோம் தமிழகத்தில் ஆறுகளில் சிறிய செக் டேம்கள் அமைக்கும் பணியை கட்டி வருகிறோம் பாலாற்றில் வெட்டுவானம் சேண்பாக்கம், திருப்பாற்கடல், பசுமாத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் ஆற்றின் குறுக்கே செக் டேம்களை அமைத்து வருகிறோம்.
பணிகள் நடந்து வருகிறது கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் கனிம வளங்களில் 1700 கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வந்தது நாங்கள் ஆட்சிக்கு வந்து 1700 கோடி நஷ்டத்தை பூர்த்தி செய்து பல இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக வெட்டி எடுத்தவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதித்து சரி செய்துள்ளோம்.
எங்கள் ஆட்சியில் எந்த கனிம வளமுறைகேடுகளும் நடக்கவில்லை மேலும் மகளிர் உரிமைதொகை வழங்குவதில் எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு உண்மையல்ல யாருக்கு வழங்கவேண்டுமென எழுதிகொடுத்தால் வழங்குகிறோம் என கூறினார்.
தமிழக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை! காங்கிரஸ் தலைவர் அழகிரி வேலூரில் பேட்டி!
கு.அசோக்,
தமிழக முதல்வர் ஆளுநரை திரும்ப பெற வேண்டுமென குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது பாராட்டதக்கது - தமிழக அரசுக்கு எந்த ஆபத்தும் இல்லை - மகளிருக்கு ரூ.1000 வழங்குவது எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை - காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி வேலூரில் பேட்டி.
வேலூர் மாவட்டம், வேலூரில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் அழகிரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு நீண்ட கடிதம் எழுதியுள்ளார். தமிழக அளுநர் எவ்வாறு சட்டத்திற்கும் மரபுக்கும் புறம்பாக செயல்படுகிறார் எனவும் ஒரு மாநில அரசுக்கு ஆளுநர் எவ்வாறு உதவ முடியும் என்பதற்கு மாறாக எவ்வாறு சிரமம் கொடுக்க வேண்டும் என செயல்படுகிறார் என்பதை திறம்பட எழுதியுள்ளார்.
முதல்வரின் கடிதம் பொன் எழுத்துக்களால் பொறிக்கபடவேண்டியவை. அவர் புறம்பாக எவ்வாறு ஆளுநர் செயல்படுகிறார் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் சட்டத்திற்கு மரபுக்கும் அப்பாற்பட்டவர் இல்லை, அவர் ஊடு பயிர் போன்றவை எனவே சுய அதிகாரம் இல்லாத தன்னால் எதுவும் பிரத்யேக வரம்பு இல்லாமல் செயல்படும் ஆளுநர் மூன்று நடவடிக்கை எடுத்து பின் வாங்கினார்.
இது ஆளுநர் மாளிகைக்கு அழகல்ல, குடியரசு தலைவர் உடனடியாக முடிவு எடுத்து ஆளுநரை திரும்ப பெற வேண்டும் இல்லையென்றால் ஆளுநர் எதிலும் பங்கேற்க முடியாத அரசாக இது போய்விடும்.
எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தமிழகத்தில் ஆட்சி போகாது, ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பதற்காகவும் மதசார்பற்ற கூட்டணிகள் ஒன்று சேர வேண்டும் எனவும் பிரதான நேர்கோட்டில் கட்சிகள் பயணிக்க வேண்டுமென இந்தியாவின் நட்சத்திரமாக திகழ்பவர் முதல்வர் இதனால் சிரமம் கொடுக்கிறார்.
இதனால் மக்களிடம் முதல்வருக்கு செல்வாக்கு தான் பெருகும் மேற்கு வங்காளத்தில் 20 பேர் கொல்லப்பட்டுள்ள கலாச்சாரம் மோசமான கலாச்சாரம் வாங்கு வங்கியில் அரசியல் கட்சி பலமாக இருக்க வேண்டும் வாங்கு சாவடி கைபற்ற வேண்டிய கவணம் என்பது தவறு அது கூடாது.
இலங்கை ராணுவம் கைது செய்ய தமிழக மீனவர்களுக்கான நிரந்தர தீர்வு எல்லை கோட்டை வரையரை செய்வது தான் காங்கிரசின் நிலை தமிழக அரசின் நிலை தான் காவிரியில் மேகதாது பிரச்சணையில் தனி மனித வார்த்தை நடைமுறைக்கு வராது மேகதாது அணை விவகாரத்தில் அப்போது அதிமுக எடப்பாடி அரசு மௌனமாக இருந்துவிட்டது அதனால் தான் இப்போது அளவில் இந்த பிரச்சணை வளர்ந்திருக்கிறது.
செந்தில் பாலாஜியை அசைக்க முடியாது, மகளிருக்கு 1000 உதவி தொகை என்பது அரசு ஊழியர்கள் 10 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு எப்படி உதவி தொகை வழங்க முடியும் அதனால் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
தமிழர்கள் தான் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என சரத்பவார் கூறினார், ஆனால் தமிழ்நாட்டில் எல்லோருக்கும் ஒரே மாதிரியான குடும்ப அட்டை கொடுத்தது தவறு ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மகளிருக்கு ரூ.1000 வழங்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் கிடையாது.
மாநில அரசை கலைக்க சட்டத்தில் இடம் இருக்கிறது, தமிழ்நாட்டில் மகளிருக்கு ரூ.1000 திட்டத்தை செயல்படுத்துவதை பாராட்டுவோம் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் அதிக இடம் கேட்கும் பத்திரபதிவு கட்டணங்களை உயர்த்தியது தவறில்லை அரசுக்கு தான் வருமானம் ஏற்படும் என கூறினார்.
பேட்டியின் போது மாவட்டத்தலைவர்கள் டீக்காராமன் ,சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
காவல்துறைக்கு எட்டு மணி நேர வேலை அளிக்க வேண்டும்! திருமாவளவன் பேட்டி!
ஜி.கே.சேகரன்,
காவல்துறைக்கு எட்டு மணி நேர வேலைமட்டுமே அளிக்க வேண்டும், தமிழக ஆளுநர் குறித்து குடியரசு தலைவருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியது வரவேற்கதக்கது - குடியரசு தலைவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் - முதல்வர் ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என கூறும் கொள்கை பிடிப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேலூரில் பேட்டி
வேலூர் மாவட்டம், வேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் இந்துத்துவா செயல் திட்டத்தின் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும், பெங்களூரில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடக்கிறது. இதில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் நான் பங்கேற்கிறேன் விடுதலை சிறுத்தைகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு நன்றி.
குடியரசு தலைவருக்கு முதல்வர் கடிதம் எழுதியுள்ளார். அதனை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது, குடியரசு தலைவர் எதிர்வினையாற்றுவார் என நினைக்கிறேன் குடியரசு தலைவர் சுதந்திரமாக செயல்பட வேண்டும் ஆளுநர் அரசியலமைப்பு கடமைகளை செய்ய தவறி சனாதன அரசியலை பேசுகிறார். திமுக அரசுக்கு நெருக்கடி தருவது தான் அவரது நோக்கம். பெரியார் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க மறுக்கிறார் வள்ளலார் சனாதன உச்ச நட்சத்திரம் என்று கூறியுள்ளார் சட்டமன்றத்தில் நிறைவேற்றபடும் தீர்மானங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கபடவில்லை சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை, இவை அனைத்து அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக அவர் நடந்துகொண்டதற்கான சான்றுகள்.
முதல்வர் ஆட்சியை கலைத்தாலும் பரவாயில்லை என்பது சனாதன எதிர்ப்பை காட்டுகிறது முதல்வரின் இந்த கூற்று வரவேற்கதக்கது அவரது கொள்கை பிடிப்பை விடுதலை சிறுத்தைகள் வரவேற்கிறது காவல்துறையினர் 24 மணிநேரமும் பணி செய்யகின்றனர் சங்கம் அமைக்க உரிமையில்லை.
அவர்களுக்கு 8 மணி நேர வேலையை உறுதி படுத்த வேண்டும் காவல்துறைக்கு எட்டு மணி நேர வேலைமட்டுமே அளிக்க வேண்டும் டி.ஐஜி விஜயகுமார் மரணம் மிகுந்த துயரத்தை தருகிறது தற்கொலை தீர்வல்ல உயரதிகாரிகள் மன உளைச்சலுக்கு ஆளாபவர்களுக்கு கவுன்சிலிங்க் அளித்து முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்
என் மனைவியை எனக்கு எதிராக பேசவைக்கிறது பா.ஜ.க. வேல்முருகன் பேட்டி!
கு.அசோக்,
பாஜக நாளுக்கு நாள் இந்தியாவை அமைதியின்மையை நோக்கி அழைத்து செல்கிறது, என் மனைவியை எனக்கு எதிராக பேசவைக்கிறது பா.ஜ.க., மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் மதிப்பளிக்காமல் செயல்படுகிறார் - ஆளுநர் குறித்து தமிழக முதல்வர் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளது வரவேற்கதக்கது -
வேலூர்மாவட்டம்,வேலூரில் தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் பாசிச பாஜக நாளுக்கு இந்தியாவை அமைதியின்மையை நோக்கி அழைத்து செல்கிறது சகோதரத்துவம் சமத்தும் போன்றவைகளுக்கு பேராபத்து உள்ளது தமிழக மக்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்காமல் ஆளுநர் தாந்தோன்றி தனமாக செயல்படுகிறார்.
முதல்வர் தமிழக ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறோம் பாராட்டுகிறோம், ஆர்,எஸ்.எஸ் சங்க் பரிவார் ஆட்சியில் கோலோற்றுகிறார்கள் அவர்களையும் இனம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் அநீதியை எதிர்த்து குரல் கொடுக்கும் மாநிலம் தமிழகம் இதனை கட்டுபடுத்துவதை ஏற்றுகொள்ள முடியாது.
ஆளுநரை திரும்ப பெற வேண்டும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு ஆளுநர் மதிப்பளிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறார்.
ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனது துணைவியார் 2018 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்கிறார் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது என்னை பிடிக்காத சனாதன சங்கி கூட்டம் எனக்கு எதிராக பேச வேண்டுமென கூறி காஞ்சி பாஜக மாவட்ட செயலாளராக நியமனம் செய்து எனது பெயருக்கு கலங்கம் விளைவிக்கின்றனர்.
என் மனைவி ஜீவனாம்சம் கேட்டதாகவும் நான் தரமறுத்ததாகவும் கூறுகிறார்கள், என் மீது லஞ்சம் ஊழல் அரசு சொத்தை கைபற்றியதாகவோ என் வீட்டிற்கு வருமான விரி சி.பி.ஐ அனுப்ப முடியாது.
நான் தமிழ்மொழிக்கும் இனத்திற்கு எதிராக வேலைவாய்ப்பை பறிப்பதற்கு எதிராகவும் அனைத்து ஜாதிகளையும் உயர்பதவியில் நியமிக்க கோருகிறேன், இதனை எதிர்கொள்ள திராணியற்றவர்கள் என் மனைவி அழைத்து எனக்கு எதிராக பாசிசத்தை மட்டுபடுத்த நினைக்கின்றனர். இருப்பினும் பாஜகவுக்கு எதிராக பேச வந்திருக்கிறேன் மணல் குவாரிகள் அரசின் கட்டுபாட்டில் இருக்க வேண்டுமென சட்டமாக்கினேன். இன்றைக்கு லாட்டரி விற்கப்படுவதை எதிர்த்து சட்டம் கொண்டு வந்தேன்.
மாவட்டத்திற்கு ஒரு பொறியியல் கல்லூரி மருத்துவக்கல்லூரியை கொண்டு வந்தோம், மணல் குவாரி கல்வி கொள்ளைக்கு எதிராக என்னுடைய போராட்டம் தொடர்கிறது.
நீர் ஆதாரங்களை அழிக்கும் செயலில் ஈடுபட கூடாது, மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து போராட வேண்டும் நாடாளுமன்றத்தேர்தலிலும் திமுக கூட்டணியில் தொடருவோம் என கூறினார்.