ரவுடி வண்டு ராஜேஷ் வெட்டிகொலை!தமிழகத்தில் தொடர்ந்து சம்பவங்கள்! மக்கள் அச்சம்!

ஜி.கே.சேகரன்,
ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். முன் விரோதம் காரணமாக பழிக்கு பழியாக கொலைஎன போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கிராமத்தை சேர்ந்தவர் வண்டு ராஜேஷ் வயது (30 ). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் சோளிங்கர் ரயில் நிலையத்தில் வண்டு ராஜேஷ் தலை மற்றும் கைகளில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிந்தது.தண்டவாளத்தில் இருந்ததால் காட்பாடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வெட்டு காயங்கள் இருந்தால் அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகத்தில் பாணாவரம் போலீசார் அரக்கோணம் உதவி காவல் கண்காணிப்பாளர் யாதவ் க்ரிஷ் அசோக்கிற்கு தகவல் தெரிவித்தனர்.இதைத்தொடர்ந்து உதவி காவல் கண்காணிப்பாளர், மற்றும் ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளர் பிரபு மற்றும் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் ரவுடி வண்டு ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பழிக்கு பழி தீர்க்கும் வகையில் யாரேனும் ரவுடி வண்டு ராஜேஷை வெட்டி கொலை செய்து தண்டவாளத்தில் வீசிவிட்டு சென்றார்களா என போலீசார விசாரித்து வந்தனர்.
இச்சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.
இதனிடையே தலை மற்றும் கைகளில் மட்டுகே காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதால் இந்நிலையில் பழைய குற்றவழக்கு சம்மந்தமாக நீதி மன்றத்தில் ஆஜார் ஆக இருந்த நேரத்தில் ரயில் நிலைய நடைமேடை அருகே உயிரிழந்த நிலையில் வீசப்பட்டிருந்தார்.
அப்படியிருக்க பழைய குற்றசம்பவங்களில் தொடர்புடையவர் என்பதால் சம்பவ இடத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் கண்கானிப்பாளர் விஷ்வேஷ்வரய்யா, அரக்கோணம் ஏஎஸ்பி யாதவ்கிரீஸ் அசோக், ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு, பாணாவரம் காவல் ஆய்வாளர் லட்சுமிபதி, காட்பாடி ரயில்வே காவல் ஆய்வாளர் சித்ரா, சோளிங்கர் காவல் ஆய்வாளர் பாரதி, உள்ளிட்ட 50-க்கும் மேற்ப்பட்ட காவல்துறையினர் சம்பவ இடத்தில் தீவிர ஆய்வு மேற்க்கொண்டனர்.
பின்னர் கொலையாளிகளை தேடி வந்ததில் ஆறு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் வெளிதாங்கிபுரத்தை சேர்ந்த அப்பு சதீஷ் (24),கீழ்செந்துரை சேர்ந்த தீபக்குமார்(23) மற்றும் அதே ஊரை சேர்ந்தஆகாஷ்(22),வெங்கட ரத்தினம் (22),மாரிமுத்து (23)இந்த வாலிபர்கள் ஐந்து பேரும் முன் விரோதம் காரணமாக இந்த கொலையை செய்தனர் தெரியவந்துள்ளது.ராகவே அவர்கள் ஆறு பேரும் கைது செய்யப்பட்டார்கள்.