விஷ குலவி கொட்டி இருவர் கவலைக்கிடம்!

விஷ குலவி கொட்டி இருவர் கவலைக்கிடம்!

பா சுரேஷ்,

செங்கல்பட்டு, செப்.19 -விஷ குலவி கொட்டி இருவர் கவலைக்கிடம்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் அடங்கிய கொளத்தாஞ்சேரி, கொங்கனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த பட்டுரோஜா ( 68 ) மற்றும் மூர்த்தி ( 59 ) ஆகியோர் விஷம் பொருந்திய குலவி கொட்டி இருவர் மயக்கம் அடைந்தனர்.

இந்நிலையில் துரிதமாக செயல்பட்ட, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதிதனசேகரன், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

அப்படி இருக்க  சம்பவம் நடந்து 2 மணி நேரம் கடந்த நிலையில் ரெட்டிப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சந்தியா செந்தில் இதுவரை உயிருக்கு போராடும் பாதிக்கப்பட்டோரை பார்க்காதது இரு கிராமங்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில்  முதற்கட்ட சிகிச்சைக்காக ரெட்டிட்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று, அதன்பின் மேல் சிகிச்க்காக இரு அம்புலன்ஸ் உதவியோடு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இதனால் ரெட்டிப்பாளையம் ஊராட்சியில் பரபரப்பு காணப்படுகின்றனது. உடனடியாக மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து விஷ குலவி கூடினை அழித்திட வேண்டுமென, பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.