மாணவர்கள் நலன்கருதி பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ற பகுதி நீக்கம்! த.ம.ப.கண்காணிப்பாளர் தகவல்!

க.பாலகுரு,
சியுஇடி 2023 விண்ணப்பிக்க கூடிய மாணவர்களுக்கு விண்ணப்ப படிவத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிக்கும் பகுதி நீக்கப்பட்டது பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் நாகராஜன் தகவல் .
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகங்களில் சியுஇடி 2023 நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதில் தமிழக மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு மதிப்பெண் குறிக்கும் பகுதி நீக்கப்பட்டது
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் நாகராஜன் தகவல்
இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் வருகின்ற ஏப்ரல் மாதம் இறுதி அல்லது மே மாதம் தொடக்கத்தில் தேசிய தேர்வு முகமையின் மூலம் சியுஇடி 2023 நுழைவு தேர்வு நடைபெற உள்ளது. இந்த நுழைவு தேர்வில் தேர்ச்சி பெறுவர்கள் மட்டுமே மத்திய பல்கலைக்கழகங்களில் பயில முடியும்.
பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர்கள் அதற்காக முன்கூட்டியே விண்ணப்பிக்க பிப்ரவரி 12ஆம் தேதி முதல் மார்ச் 12ஆம் தேதி வரை நாள் கொடுத்து , மாணவர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.
இந்நிலையில் அந்த விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி குறித்து கேட்கப்பட்டிருந்தது.
ஆனால் 2021 ஆம் ஆண்டில் கொரோனா தொற்றின் காரணமாக தமிழகத்தில் பயின்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவிக்கப்பட்டதால்,அந்த விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி குறித்து மாணவர்களால் மதிப்பெண்கள் இட முடியவில்லை.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக தேர்வு கண்காணிப்பாளர் நாகராஜனிடம் இது குறித்து கேட்ட பொழுது தமிழக மாணவர்களின் நலன் கருதி அந்த விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் என்ற பகுதி நீக்கப்படுவதாகவும் அந்த பகுதி இல்லாமல் மற்ற பகுதிகளை பூர்த்தி செய்து மாணவர்கள் விண்ணப்பித்தால் போதுமானது எனவும் தெரிவித்தார்.
திருவாரூரில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் மொத்தம் 10 படிப்புகளுக்கு இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்கள் பயில உள்ளார்கள்.மேலும் தமிழக மாணவர்களின் நலன் கருதி தேர்வு தமிழிலும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு நாகராஜன் தெரிவித்தார்.