நாயே! நாயே!! மகளுக்கு போய் தந்தை இப்படி செய்யலாமா!

நாயே! நாயே!! மகளுக்கு போய் தந்தை இப்படி செய்யலாமா!

 கு.அசோக்

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்திரம்பட்டு விஏஓவை அரக்கோணம் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

  ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே உள்ள அவளூர் கிராமம் சின்ன தெருவை சேர்ந்தவர் ராமதாஸ்( 43.). இவர் நெமிலி தாலுகா உத்திரம்பட்டு கிராம விஏஓவாக பணியாற்றி வருகிறார். மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் சில நாட்களுக்கு முன்பு  மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.  ஆத்திரத்தில் மனைவி வீட்டுக்கு வெளியே சென்று விட்டார்.இந்நிலையில் ராமதாஸ் குடிபோதையில்  பிளஸ் 1 வகுப்பு படிக்கும் தனது 15 வயது மகளிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார்.

 மனநலம் பாதிக்கப்பட்ட ராமதாசின் மகன் எதுவும் கண்டு கொள்ளாமல் வீட்டில் இருந்துள்ளார்.இதுகுறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கொடுத்தார். இது குறித்து விசாரித்த இன்ஸ்பெக்டர் காஞ்சனா வழக்கு பதிவு செய்து வி.ஏ.ஓ. ராமதாசை கைது செய்தார்.

 மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து விஏஓ கைது செய்யப்பட்ட சம்பவம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.