அரசாணை 15/22 அமுல்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் முத்திரையர்கள் மனு!

அரசாணை 15/22 அமுல்படுத்த மாவட்ட ஆட்சியரிடம் முத்திரையர்கள் மனு!

 ஜி.கே.சேகரன்,

 முத்தரையர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க கோரியும் அதற்கான அரசாணையை ஏற்கனவே வெளியிடப்பட்டதை 15/22 உடனடியாக அமுல்படுத்த வேண்டும், வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனைபட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முத்தரையர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப.அவர்களிடம் மனு அளித்தனர்

 வேலூர்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு முத்தரையர் சங்கம் சார்பில் மாநில தலைவர் மூர்த்தி தலைமையில் முத்தரையர் சமுதாய மக்கள்  மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

  அதில் முத்தரையர் சமுதாய மக்கள் 29 உட் பிரிவுகளாக உள்ளனர் அவர்களை உடனடியாக அரசாணை 15/22 பயன்படுத்தி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் வீட்டுமனை பட்டா இல்லாத முத்தரையர் மக்களுக்கு வீட்டு மனைபட்டா வழங்க வேண்டும், படித்த இளைஞர்கள் சுய தொழில் துவங்க குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர் உடன் பொதுசெயலாளர் மோகன் பொருளாளர் கலைக்கண்ணன் உள்ளிட்டோர் இருந்தனர் .