பெண் போலிசால் சாமர்த்தியமாக தவிர்க்கப்பட்ட தீக்குளிப்பு சம்பவம்!
ஜி.கே.சேகரன்,
பெண் போலிஸ் ஒருவரால் தீக்குளிப்பு சம்பவம் சாமர்த்தியமாக தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த களேபரம் பற்றிய விவரம் வருமாறு,
பொன்னை காவல்நிலையம் முன்பாக நிலங்களை அபகரிக்கும் ஊராட்சிமன்றதலைவர் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தீகுளிக்க முயற்சி பதட்டம்
வேலூர் மாவட்டம்,பொன்னை அருகேயுள்ள என்.பி.என் பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் ஜெயச்சந்திரன்.இவருக்கு சொந்தமாக அந்த கிராமத்தில் 10 செண்ட் நிலம் உள்ளது இதனை அக்கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவர் ரமேஷ் என்பவர் அபகரிக்க திட்டமிட்டிருக்கிறார்.
இதனால் ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ் மீது மீது ராணுவ வீரர் ஜெயச்சந்திரன் 16-3-22 அன்றுபுகார் அளித்தார் ஆனால் காவல்துறை வழக்கம் போல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அப்படியிருக்க நேற்றிரவு 20-க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் புகுந்து இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியிருக்கிறார்.
இந்நிலையில், இடத்தை ஆக்கிமிப்பது பற்றியும், கட்டிடம் கட்டுவது குறித்தும், கொலை மிரட்டல் ஆகியவற்றை குறித்து புகார் அளித்துள்ளார். ஆனாலும் வழக்கம் போல நடவடிக்கை எடுக்காததால் ராணுவ வீரர் விரக்தியடைந்தார்.
ஆகவே இன்று காலை ஜெயச்சந்திரன் பொன்னை காவல்நிலையம் முன்பாக ஜெயச்சந்திரன் குடும்பத்தினர் முற்றுகையிட்டு கோஷங்களை எழுப்பி தீகுளிக்க முயன்றனர். ஊராட்சி மன்ற தலைவர் ஒழிக, நடவடிக்கை எடுக்காத போலிஸ் ஒழிக என்று சவுண்டு விட்டனர்.
இதே போன்று கணவால் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் இடத்தையும், முடி திருத்தும் ஒரு தொழிலாளியின் இடத்தையும் மேற்படி நபர் அபகரித்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரும் 15-க்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு தீகுளிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூல் படுத்தினர்.
இவ்வளவு களேபரங்கள் நடந்த போது பொன்னை காவல் நிலையத்தில் விஜயலஷ்மி என்கிற பெண் போலிஸ் மட்டுமே பணியில் இருந்தார்.
இந்நிலையில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை மடக்கி பிடிக்கவும்,காவல் துறையை கண்டித்து கோஷமிடுபவர்களை கட்டுபடுத்தவும் அந்த பெண் போலிஸ் படாத பாடு பட்டார்.
அவர் மட்டும் சற்று தாமதித்திருந்தாலும் "பொன்னை காவல் நிலையத்தில் பெண் தீக்குளிப்பு" என்கிற சம்பவம் தலைப்பு செய்தியாகியிருக்கும்.