காட்பாடி ஷோ ரூம் குடோனில் தீ விபத்து! ஒரு கோடி சேதம்?

கு.அசோக்,
காட்பாடி அங்காடியில் அதிகாலை முதல் தீ பிடித்து எரிந்தது. இதில் சுமார் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.
வேலூர் மாவட்டம்,காட்பாடியில் வள்ளிமலை சாலையில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான மகாலஷ்மி பல் பொருள் அங்காடி உள்ளது.
இதில் பாத்திரம், பெயிண்ட், ஷோபா செட்டுகள், மர சாமான்கள், நாற்காலிகள், பிரிட்ஜ், வாஷிங்க் மெஷின், மிக்சி, கிரைண்டர், டிவி,உள்ளிட்ட பல்வேறு எலக்ட் ரானிக் சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்த விற்பனை மையம் அருகே குடோன் உள்ளது. இதில் அதிகாலை திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது. தீ வேகமாக பரவியதால் கடை முழுவதும் எரிய துவங்கியது.
அந்த பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. இனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து காட்பாடி மற்றும் வேலூர் பகுதியிலிருந்து தீயணைப்பு இயந்திரங்கள் வந்து தீயை பல மணிநேரம் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த தீவிபத்தில் சுமார் ஒன்றரை கோடி மதிப்பிலான பொருட்கள் அனைத்தும் தீயில் நாசமாகின.
இதுகுறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.