திடீர் சாராய ரைடு!

திடீர் சாராய ரைடு!

   ஜி.கே.சேகரன்,

 வனப்பகுதியில் நடந்த சாராய வேட்டை-2 ஆயிரம் லிட்டர் கள்ளச் சாராய ஊரல் மற்றும் மூலப்பொருட்களை தீ வைத்து அழித்த போலீசார்

 வேலூர் மாவட்டம் ,பேர்ணாம்பட்டு மலைப்பகுதியை ஒட்டியுள்ள நிம்மன் காணாறு, சாத்கர் ஆகிய வனப்பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுவதாக நேற்றும் இன்றும் செய்திகள் வெளியானது.

  இது போன்ற  சமூக அக்கறையுள்ள பல செய்திகள் வெளியான சமயங்களில் அதை சப்டிவிஷன் அளவிலேயே மூடி மறைத்துவிடுவார்கள்.

  இந்நிலையில் தற்போதைய விவகாரம் குறித்த தகவல் டி.ஐ.ஜி.ஆனி விஜயா இ.கா.ப. மற்றும் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் இ.கா.ப. ஆகியோரின் பார்வைக்கு சென்றது.

  பின்னர் அவர்களின் உத்தரவின்பேரில் பேர்ணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள நிம்மன் காணாறு, சாத்கர் மலைப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட பேரணாம்பட்டு போலீசார் அங்கு கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் 2  ஆயிரம் லிட்டர் கள்ளச்சாராய ஊரல்களை கண்டுபிடித்தனர்.

  மேலும் கள்ள சாராயம் காய்ச்ச பயன்படும் அடுப்புகள் மற்றும் மூலப் பொருட்களை கண்டுபிடித்த அவற்றை தீயிட்டுக் அழித்தனர்.

  இந்த நடவடிக்கையின் போது போலீசாரை கண்டதும் அங்கிருந்து மைக்கேல் மற்றும் அன்பழகன் ஆகிய இருவர் வழக்கம் போல் தப்பிவிட்டனர்.

  அப்படியிருக்க, தப்பியோடிய சாராய உற்பத்தியாளர்கள் மீது வழக்குப் பதிந்து பேர்ணாம்பட்டு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

  கூடவே, தொடர்ந்து பேரணாம்பட்டு வனப்பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டு வரும் போலீசார் கள்ளச்சாராய ஊரல்களை அழித்து வருகின்றனர்.

  இருந்தாலும் கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் புதிதாக இடத்தை மாற்றிக் கொள்கின்றனராம்.