காவலர் வீட்டில் தீ விபத்து! பொருட்கள் எரிந்து நாசம்!

ஜி.கே.சேகரன்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த ஊசிக்கல்மேடு பகுதியைச் சேர்ந்த லதா என்பவரின் மகன் விக்னேஷ் (27) இவர் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் லதாவின் கணவர் தேவேந்திரன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
எனவே லதா மட்டும் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று உறவினருடைய காரியத்திற்காக ஆந்திர மாநிலம் குப்பத்திற்குச் சென்றுள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவருடைய குடிசை வீடு மர்மமான முறையில் தீப்பிடித்து வீட்டில் இருந்த கட்டில், டிவி உட்பட, 20ஆயிரம் பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமாயின.
அக்கம் பக்கத்தினர் வீட்டில் தீ பிடித்து எறிந்ததை கண்டு லதாவுக்கு தகவல் கொடுத்தனர்.மேலும் நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அப்போது சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர் அதற்குள் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் இருந்து நாசமாயின.மேலும் சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் மின் கசிவின் காரணமாக தீப்பற்றி எரிந்ததா அல்லது மர்ம நபர்கள் எவரேனும் தீ வைத்துள்ளனரா என்ற வண்ணம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.