இளம் வழகறிஞரை மிரட்டிய காப்பு போட்ட போலிஸ்கார் !
ஜெ.அருண் ஹென்றிக்ஸ்,
கோவையில் உள்ள 100 அடி சாலையில் போக்குவரத்து போலிஸ் பிரிவைச் சேர்ந்த இரண்டு போலிசார், இளம் வழக்கறிஞர் விக்னேஸ்வரன் என்பவரை டார்ச்சர் செய்து அவரிடம் அத்துமீறியிருக்கிறார்கள். அது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மேற்படி வழக்கறிஞர் விக்னேஸ்வரன் என்பவர் கடந்த 04.03.2023 ஆம் தேதி வழக்கு தொடர்பாக சில விவரங்களை அறிய அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்றார்.
அப்போது அவர் 100 அடி சாலையில் வசந்த் அண்ட் கோ அருகே தனது ராயல் என்பீல்டு வண்டியில் கடந்தார்.
அப்போது அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து காவல் பிரிவைச் சேர்ந்த போலிசார் இருவர் விக்னேஸ்வரனை மடக்கி ஹெல்மட் அணியவில்லை என கூறி அபராதம் விதித்து அதற்கான ரசீதை கொடுத்துள்ளனர். அதை வழகறிஞரும் பெற்றுக் கொண்டதோடு, நான் பணம் கொண்டு வரவில்லை அவசர பணி நிமித்தமாக செல்கிறேன். பின்னர் அபராதம் கட்டிக் கொள்கிறேன் என்று போலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
அதை ஏற்காத இரண்டு காவலர்களும் வழக்கறிஞர் விக்னேஸ்வரனை இப்போது பணத்தை கட்டு என்று டார்ச்சர் செய்ததோடு மானபங்கப்படுத்தும் நோக்கத்தில் பேசியிருக்கிறார்கள்.
அதன் பின்னர் வழக்கறிஞர் வீடியோ எடுக்க துவங்கியதும், சரவணன் என்கிற போலிஸ்காரன் அங்கிருந்து எஸ் ஆகிவிட, உடனிருந்த போலிஸ்காரர் வழகறிஞர் விக்னேஸ்வரனை மிரட்டும் தொணியில் பேசி பணம் பறிக்க முற்பட்டார்.
இது குறித்து வழகறிஞர் விக்னேஸ்வரனிடம் பேசினோம். கிளையன்ட் விஷயமாக ரத்தனபுரி ஸ்டேஷனுக்கு அவசரமாக சென்றேன். அப்போது இப்படி என்னை மடக்கி ஹெல்மட் கேஸ் போட்டு 3,000/- ரூபாய் அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர். அந்த ரசீதை நான் பெற்றுக் கொண்டேன். எஸ்.ஐ. தான் அபராதம் விதிக்க நியமிக்கப்பட்ட அதிகாரி என்கிற நிலையில் போலிஸ்காரர் அபராதம் விதித்தது விதிமுறை மீறலாகும்.
அந்த போலிஸ்காரர் பல பயணிகளை இப்படி மடக்கி சித்ரவதை செய்கிறார் என்பதற்கு அவர் கையில் வைத்துள்ள டூவீலர் சாவிகளே சாட்சி.
நான் பேசாத வார்த்தையை எல்லாம் சொல்லி வீடியோ எடுத்து என்னை அசிங்கம் செய்ய முயன்றுள்ளார்கள். அதுல அதிகமாக பேசுன போலிஸ்காரர் சரவணன், நான் வீடியோ எடுத்தவுடன் விலகி போய்விட்டார். ஆனால் போக்குவரத்து காவல் சீறுடையில், கையில் காப்பு போட்டிருந்த ஒரு போலிஸ்காரர் என்னிடம் அத்து மீறி பேசினார்.
என் மணி பர்சை பிடுங்க முயற்சித்தார். நான் காந்திபுரத்திலுள்ள ஷோரூமில் ராயல் என்ஃபீல்டு வண்டியை வாங்கினேன். கம்பெனி அளித்த சைலன்சரோடுதான் வண்டியை பயன்படுத்தி வருகிறேன். அப்படியிருக்கும் போது சைலன்சரை கழற்று என்று என்னை கட்டாயப்படுத்தி பலர் முன்னிலையில் மிரட்டினார். வழகறிஞர்னா மிரட்டுவீங்களா என்று அங்கு நடக்காத விஷயத்தை மக்கள் மத்தியில் சொல்லி அவமானப்படுத்தியதோடு, என்னுடைய பணிக்கு இடையூறு செய்தார்.
இதனால் எனக்கு மன உலைச்சல் ஏற்பட்டது. இது குறித்து நான் சார்ந்துள்ள அசோசேஷியன் மற்றும் போலிசில் புகார் அளிப்பேன் என்று சொன்னார்.