வீடு இடிந்ததில் 9 பேர் பலி!  எச்சரிக்கையை மீறியதால் விபத்து!!

ஜி.கே.சேகரன்,

 பேர்ணாம்பட்டு அருகே வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 9 பேர் பலியானார்கள். 4 பேர் மீட்பு,

 வேலூர் மாவட்டம்,பேர்ணாம்பட்டு அருகேயுள்ள ஏரிகுத்தி என்ற இடத்தில் காட்டாற்றின் ஓரம் குடியிருப்புகள் உள்ளன.

  மழை, பெருவெள்ளம் காரணமாக மேற்படி வீடுகளில் குடியிருந்தவர்களை வருவாய்த்துறையினர் சிறப்பு முகாமுக்கு அழைத்து சென்றனர்.

  ஆனால் குறிப்பிட்ட இரண்டு குடும்பத்தினர் மட்டும் முகாமுக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்தனர்.

 இந்நிலையில் ஆற்றில் வெள்ளம் அதிகமானதால் வீட்டின் அருகில் மண் அரிப்பு ஏற்பட்டு வீடு நொறுங்கி சரிந்தது.

 இதில் வீட்டில் இருந்த அனிஷாபேகம் (63),ரோகிநாஸ் (27),கௌசர் (45),தன்சிலா (27),அபிரா (3),மனுல்லா(8),தாமேத் (2),அப்ரா (4),மிஸ்பா பாத்திமா (22) ஆகிய 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

மேலும் அந்த குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படுகாயமடைந்து பேர்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  அந்த வீட்டில் மொத்தம் 13 பேர் இருந்தனர். இறந்தவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

 எச்சரிக்கையையும் மீறி இவர்கள் வீட்டில் இருந்ததால் இப்படி உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே அரசாங்கத்தின் எச்சரிக்கையை கடைபிடித்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என வருவாய் அலுவலர்கள் கேட்டுக் கொண்டனர்.